“ஒரே நாடு – ஒரே தேர்தல்: பா.ஜ.க. அரசின் சதி” நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் குற்றச்சாட்டு

viduthalai
2 Min Read

கோவை, செப். 23– ஒரே நாடு ஒரே தேர்தல் பாஜக அரசின் சதி என்று கோவையில் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் தெரிவித்தார்.
திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் மண்டல அளவிலான கலந்துரையாடல் கூட்டம் கோவை கொடிசியா அருகே தனியார் ஹாலில் நேற்று (செப்.22) நடைபெற்றது. கூட்டத்தில் அந்த அணியின் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார்

அப்போது அவர் கூறியதாவது, “விளை யாட்டு மேம்பாட்டு அணி சார்பில் 18 மாதங்களில் 185 நிகழ்ச்சிகள் நடத்தி உள்ளோம். இதில் புதிய இளைஞர்களை உருவாக்க வேண்டும்.

2026ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்த லில் 200 சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற வேண்டும் என்பதே நமது இலக்கு” என்றார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

“ஒரே நாடு ஒரே தேர்தல் ஒன்றிய அரசின் சதி. கடந்த 10 ஆண்டுக ளாக ஒன்றிய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்போ அல்லது ஜாதி வாரி கணக் கெடுப்போ நடத்தவில்லை.

அதையெல்லாம் விட்டு விட்டு ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்த திட்டமிடுகிறார்கள். காஷ்மீருக்கே இப்போது தான் தேர்தல் நடத்து கிறார்கள்.
பாஜக அரசு ஏதோ சதி செய்கிறது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வடமாநிலத்தில் நடக் கும் நிகழ்ச்சியில் ஒருவர் ஹிந்தியில் பேசி கேள்வி கேட்டால் அவர் களுக்கு மரியாதை கொடுக் கிறார்கள்.

இங்கு ஒருவர் தமிழில் பேசி கேள்வி கேட்டால் மரியாதை கொடுப்பதில்லை. நீட் தேர்வில் முறைகேடுகள் நடக்கின்றன.

பிரதமர் மோடி இந்தியாவில் இருப்பதே குறைவு. வெளிநாடுகளில் மட்டும் இருக்கிறார். மதத்தை வைத்தே பாஜக அரசியல் செய்கிறது. அதிமுக மிக கடினமான காலத்தில் உள்ளது. முதுகுத் தண்டு வளைந்துள்ளதால் தான் அவர்களால் நிமிர முடியவில்லை.

பாஜகவிடம் அடிமை யாக வைத்திருந்தது பழனிசாமி செய்த தவறு” இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மாவட்ட செயலாளர்கள் மேனாள் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக், தொ.அ.ரவி, தளபதி முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *