எல்லை இல்லை இலங்கை கடற்படை கொடுமைக்கு தமிழ்நாட்டு மீனவர்கள் 37 பேர் கைது

viduthalai
1 Min Read

நாகை, செப்.22 எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழ்நாட்டைச் சேர்ந்த 37 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்கொள்ளையர்களாலும் கடற் படை யினராலும் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழ்நாட்டு மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக ஒன்றிய அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் பலமுறை வலியுறுத்தி கடிதங்களை எழுதி வருகிறார். இந்த சூழலில், தமிழ்நாட்டின் நாகை, மயிலாடுதுறையை சேர்ந்த மீனவர்கள் சிலர் கடலில் மீன்பிடிக்கச் சென்றனர்.

மீனவர்கள் இலங்கை நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டுள்ளனர். 3 விசைப்படகுகளுடன் 37 மீனவர்களை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படை கைது செய்தது. கைதான 37 மீனவர்களும் காங்கேசன் துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். விசாரணைக்குப் பின் மீனவர்கள் யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதி காரிகளிடம் ஒப்படைக்கப்படுவர் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் மீனவர்களிடை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மீனவர் பிரச்சினைக்கு ஒன்றிய அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும் என மீனவ சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *