தென் மண்டல எல்.அய் .சி. அலுவலகத்தில் தந்தை பெரியாரின் 146 ஆவது பிறந்த நாள் விழா

1 Min Read

சென்னை, செப்.22 கடந்த 18 ஆம் தேதி சென்னை அண்ணா சாலையில் உள்ள எல்.அய் .சி. தென் மண்டல அலுவலகத்தில் தந்தை பெரியாரின் 146 ஆவது பிறந்த நாள் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

தமிழ்நாடு

எல்.அய் .சி. பிற்படுத்தப்பட்டோர் நலச் சங்கத்தின் சென்னை கோட்டம் – ஒன்றின் துணைத் தலைவர் ந. கோட்டீஸ்வரன் பிறந்த நாள் விழாவிற்குத் தலைமையேற்றார்.

சென்னை முதல் கோட்டத்தின் தலைவர் முரளி அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.

அனைத்திந்திய பிறப்படுத்தப்பட்டோர் நலச் சங்கத்தின் மேனாள் துணைத்தலைவர் ப.தயாளன் தந்தை பெரியாரின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து சிறப்பு ரையாற்றினார்.

சென்னை கோட்டத்தின் எஸ்.சி./எஸ்,டி நலச் சங்கத்தின் நிர்வாகிகளும், பிற்படுத்தப் பட்டோர் நலச் சங்கத்தின் நிர்வாகிகளும், விழாவில் பெருமளவு கலந்துகொண்டனர்.

தங்களது உரையில் சமூக முன்னேற்றத் திற்குத் தந்தை பெரியாரின் தேவையை வலியுறுத்திப் பேசினார்கள்.
சமூக நீதி நாள் உறுதி மொழியினை தோழர்கள் உரக்கக் கூறி, நிறைவேற்ற உறுதி பூண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன .

நிகழ்ச்சியின் நிறைவாகக் கோட்டப் பொருளாளர் சந்தானம் நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *