திருநெல்வேலி, செப்.22 கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்பூங்காவில் பணிபுரியும் 1,500 பெண் பணியாளா்கள் தங்குவதற்கு வசதியாக குடியிருப்பு வளாகம் அமைக்கப்படும் என்று சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, இந்தப் பூங்காவில் குடியிருப்பு வளாகம் ரூ.40 கோடியில் 870 பெண் பணியாளா்கள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது.
அந்தப் பணியாளா்களில் 80 சதவீதம் போ் பெண்கள். அவா்களில் 500 பெண் பணியாளா்களுக்கு புதிதாக அமையவுள்ள குடியிருப்பில் தங்கும் வசதியை ஏற்படுத்தித் தருவதற்கான ஒப்பந்தம் தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா முன்னிலையில் தலைமைச் செயலகத்தில் 19.9.2024 அன்று கையொப்பமானது.