திருமருகல், செப். 22- நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம், சுயமரியாதை சுடரொளி மருங்கூர் வி.ஆர். இல்ல வாழ்க்கை இணை ஏற்பு விழா 16.09.2024 அன்று திருமருகல் வாசவி திருமண மண்டபத்தில் காலை 9.00 மணி அளவில் நடைபெற்றது. நாகை மாவட்டம் மருங்கூர் வி.ராஜேந்திரன் – தமிழ்ச்செல்வி ஆகியோரின் மகன் இரா.அஞ்சாநெஞ்சன், திருவாரூர் மாவட்டம் ஓடாச்சேரி எஸ்.குணசேகரன் – சந்திர கலா ஆகியோரின் மகள் கு.சுஜிதா இணை யர்களுக்கு கழக மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக் குமார் வாழ்க்கை இணை ஏற்பு ஒப்பந்த உறுதிமொழியை ஏற்கச் செய்து இணையேற்பினை நடத்தி வைத்து வாழ்வியல் உரையாற்றினார்.
இணையேற்பு விழா வானது நாகை மாவட்ட தலைவர் வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன் தலைமையில் திருமருகல் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஆர்.டி.எஸ்.சரவணன், திருமருகல் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் செல்வ. செங்குட்டுவன், கழக மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக பொன்முடி, மாவட்ட துணைத் தலைவர் பொன்.செல்வராசு, மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் இராச.முருகையன், மாவட்ட இளைஞரணி தலைவர் சு.ராஜ்மோகன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. மாநில சட்டக் கல்லூரி மாணவர் கழக அமைப்பாளர் மு.இளமாறன் அனைவரை யும் வரவேற்று உரை யாற்றினார்.
நாகை மாவட்ட திமுக செயலாளர், தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத் தலைவர் என்.கவுதமன், திமுக மாநில விவசாய தொழிலாளர் அணி செயலாளர், தமிழ்நாடு தாட்கோ தலைவர் உ.மதிவாணன், கழக நாகை மாவட்ட செயலாளர் ஜெ. புபேஸ்குப்தா ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்.
மேலும் அதிமுக அமைப்பு செயலாளர், மேனாள் சட்டமன்ற உறுப் பினர் எஸ்.ஆசைமணி, திருமருகல் ஒன்றிய கழகத் தலைவர் மு.சின்னதுரை, திமுக மாவட்ட துணை செயலாளர், ஒன்றிய குழு உறுப்பினர் ஆரூர்.மணிவண்ணன், திருவாரூர் மாவட்ட இளைஞரணி பொறுப்பாளர் நெல்சன் மண்டேலா, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் துளசி செல்வேந்திரன், சமூக ஆர்வலர் விஜயராகவன், கழக வட்டார விவசாய அணி தலைவர் காமராஜ், மாவட்ட மாணவர் கழகத் தலைவர் மு. குட்டிமணி, மாவட்ட மாணவர் கழக துணை தலைவர் ம.ஆதித்யன், மருங்கூர் மகாலிங்கம், முனுசாமி, மகேந்திரன், ஒன்றிய துணைத் தலைவர் காமராஜ், கொட்டாரக்குடி ரமேஷ் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள், அனைத்து கட்சி தோழர் கள், நண்பர்கள், உற்றார் உறவினர்கள் திரளாக பங்கேற்ற சிறப்பித்தனர்.
கழக மாவட்ட இளைஞர் அணி துணைத் தலைவர் வி.ஆர்.அறிவுமணி குடும்பத்தின் சார்பிலும் மாவட்ட கழகத்தின் சார்பிலும் அனைவருக்கு நன்றி கூறினார்.