மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்

viduthalai
0 Min Read

தந்தை பெரியார் அவர்களின் 146ஆவது பிறந்தநாளை முன்னிட்டு பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) துணைவேந்தர் முனைவர் பேரா வெ.இராமச்சந்திரன் அவர்கள் தஞ்சை பழைய பேருந்து நிலையத்திலுள்ள தந்தை பெரியார் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் புதிய பேருந்து நிலையத்திலுள்ள தந்தை பெரியார் உருவச்சிலைக்கு பல்கலைக்கழக கூடுதல் பதிவாளர் பேரா ஆர்.மல்லிகா மற்றும் வல்லத்திலுள்ள தந்தை பெரியார் உருவச்சிலைக்கு பதிவாளர் பேரா பி.கே.சிறீவித்யா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இந்நிகழ்வில் துறைத் தலைவர்கள், முதன்மையர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *