கந்தர்வ கோட்டை அருகே அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா

viduthalai
1 Min Read

கந்தர்வகோட்டை, செப். 22- புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டை ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அக்கச்சிப்பட்டியில் பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு சமூக நீதி நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது.
இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார். அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ரகமதுல்லா அனைவரையும் வரவேற் றார்.

சிறப்பு அழைப்பாள ராக கலந்து கொண்ட புதுக்கோட்டை ஆசிரியர் பயிற்சி கல்வி நிறுவனத்தின் முதுநிலை விரிவுரையாளர் மு மாரியப்பன் சமூக நீதி நாள் உறுதி மொழியை வாசித்தார். மாணவர்களும், ஆசிரியர் களும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
மேலும் தமிழ்நாட்டில் பெரியார் ஏற்படுத்திய சீர்திருத்தங்கள் குறித்து பேசினார். பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு பெரியார் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ் வில் ஆசிரியர்கள் சிந்தியா, நிவின், வெள்ளைச்சாமி, செல்வி ஜாய், ஹில்டா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *