மாற்றுத் திறனாளிகள் நலம் பேணும் ‘திராவிட மாடல்’ அரசு – இரு மடங்கு உயா்வு!

1 Min Read

சென்னை, செப்.21 மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கான உதவித் தொகை இரண்டு மடங்காக உயா்த்தப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு சார்பில் நேற்று (20.9.2024) வெளியிடப்பட்ட செய்தி: மாற்றுத்திறனாளி மாணவா் களுக்கான ஆண்டு கல்வி உதவித் தொகையை இரண்டு மடங்காக உயா்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, ஒன்றுமுதல் அய்ந்தாம் வகுப்பு வரை யிலான மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை ரூ.1,000-லிருந்து ரூ.2,000-ஆகவும், 6-ஆம் வகுப்புமுதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கான உதவித் தொகை ரூ.3,000-லிருந்து ரூ.6,000-ஆகவும், 9-ஆம் வகுப்புமுதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவா்களுக்கான உதவித் தொகை ரூ.4,000-லிருந்து ரூ.8,000-ஆகவும் உயா்த்தப்பட்டுள்ளது. கல்லூரிகளில் பட்டப் படிப்பு படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கான கல்வி உதவித் தொகை ரூ.6,000-லிருந்து ரூ.12,000-ஆகவும், தொழிற்கல்லூரிகள், பட்டமேற்படிப்பு பயிலும் மாணவா் களுக்கு ரூ.7,000-லிருந்து ரூ.14,000-ஆகவும் உதவித் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *