திராவிடர் விழியாய் பெரியார்

Viduthalai
0 Min Read
அடிமை செய் நூல்களை – ஏடால்
அறுத்தெறிந்த பெரியார்
கொடுமைசெய் சமூகத்தை – பெரும்
கொள்கையால் வென்ற பெரியார்
புற்று நோய் நாவையெல்லாம் – இறுதிப்
புறமுதுகிட்டு ஓடச் செய்த பெரியார்
வெற்று வீணர்தம் பேச்சை – உரைவாள்
வீச்சால் வேரறுத்த பெரியார்
மலையாய் நின்ற பெரியார் – நல்
மழையாய் வந்த பெரியார் – எரி
மலையாய் எரிந்த பெரியார் – பெண்களின்
துணிவாய் உறைந்த பெரியார்
தெளிவாய் இருந்தார் பெரியார் – தமிழ்
திராவிடத்தின் விழியாய் இருக்கும் பெரியார்
என்றும் வாழும் பெரியார்
எல்லோரையும் வாழ்விக்கும் பெரியார் வாழ்கவே!
– கே.பாண்டுரங்கன்
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *