தெரிந்துகொள்ளுங்கள்!

Viduthalai
1 Min Read

ஒரு ஆங்கில செய்தியாளர் அண்ணாவிடம் கேட்ட கேள் வியும், அண்ணாவின் பதிலும்!
My Country is Economically ill.
Educationally dull.
Politically Null.
But Culturally Well.

***

ஹிந்தி மொழிதான் தேசிய மொழியாக வரவேண்டும் என்று எல்லோரும் நாடாளுமன்றத்தில் சொன்னார்களாம்.
ஏன் என்று அண்ணா கேட்டாராம்.
ஏனென்றால், அந்த மொழியைத்தான் அதிகமாக மக்கள் பேசுகிறார்கள் என்று சொன்னார்களாம்.
அப்போது அண்ணா அவர்கள், ‘‘நம்முடைய நாட்டில் காகங்கள் தான் அதிகமாக இருக்கிறது. அதற்காக காக்காவையா நாம் தேசியப் பறவை என்று சொல்லுகிறோம். இருப்பதிலேயே அழகான பறவையான மயிலைத்தானே தேசிய பறவை என்று சொல்லுகிறோம். அப்படிப் மொழிகளிலேயே அழகான மொழி தமிழ் மொழிதான்.

அப்படி பார்க்கப் போனால், தமிழ் மொழிதான் தேசிய மொழியாக வரவேண்டும்” என்று சொன்னாராம்.
இவர் தமிழ் பேசி எல்லோரையும் மயக்குகிறார் என்றார்களாம்.
அப்பொழுது அண்ணா அவர்கள் சொன்னார், ‘‘கிளிக்கு யாரும் பச்சை வர்ணம் அடிக்கவேண்டும் என்கிற அவசியம் இல்லை. மயிலுக்கு யாரும் அழகு சேர்க்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. அது அழகாக இருக்கிறது. அதனால் பார்ப்பவர்கள் மயங்கு கிறார்கள். அதுபோல், தமிழ் மொழி இயற்கையிலேயே அழகாக இருக்கிறது; அதனால், நான் சொல்லும்பொழுது மயக்கத்தைத் தருகிறது என்று சொன்னாராம்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *