பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 17 “சமூகநீதி நாளை” யொட்டி அரசு வேலூர் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு தந்தை பெரியார் அவர்களின் படத்தினை மருத்துவமனையின் குடியிருப்பு மருத்துவ அலுவலர் மருத்துவர் சி. இன்பராஜ் அவர்களிடம் கல்லூரி மருத்துவமனையின் ஆய்வக நுட்பநர் பாணாவரம் பெ. வீரமணி, மற்றும் நிழற்படக் கலைஞர் “தலித்முரசு” வெ.சுந்தர்ராஜ் ஆகியோர் இணைந்து நன்கொடையாக வழங்கினர்.