மலேசியா, செப்.20 மதிக பாடாங் செராய் கிளையின் ஏற்பாட்டில் தந்தை பெரியார் 146ஆம் ஆண்டு பிறந்தநாள் நிகழ்ச்சி பாலன் (குமரன்) தலைமையில் மிகச் சிறப்பாக கொண் டாடப்பட்டது. பா.சீதை தமிழ் வாழ்த்துடன் தந்தை பெரியாருக்கு மலர் செலுத்தி நிகழ்ச்சி தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு வருகையாளராக மதிக கம்போங் ராஜா கிளைத் தலைவரும் சூரியன் நிறுவனத்தின் உரிமை யாளருமான வ.கதிரவன் கலந்து சிறப்பித்தார்.
மதிக பாடாங் செராய் கிளை இதுவரையில் நாரண அய்யாரு சா.வடிவேலு தலைமையில் பெரியார் பிறந்தநாள் மற்றும் பல நிகழ்ச்சிகளை பாடாங் செராய் வட்டாரத்தில் திறம்பட நடத்தி வந்ததாக குறிப்பிட்டார். அன்றைய காலத்தில் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வந்து சென்றதை யும் நினைவு கூர்ந்தார். தந்தை பெரியாரின் திராவிட பயணத்தின் முன்னிலை செய்திகளுடன் சிறப்பாக சிறப்புரையாற்றினார். மலேசியத் தமிழ் நெறிக் கழக தேசிய உதவித்தலைவர் தமிழ்த் திரு க.மன்னன் தமதுரையில் பெரியாரின் சீர்திருத்தங்களைப் பற்றி சிறப்பாக பேசியது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. பிரேம் பிரேமா சிறப்பு வருகையாளராக வருகை புரிந்தனர். ஈப்போவிலிருந்து வருகைபுரிந்த ஆறுமுகம் இந்நிகழ்ச்சியில் கலந்து நன்றி உரையாற்றினார். வ.கதிரவன் அவர்களது
நற்பணிகளுக்காக இந்நிகழ்ச்சியில் சிறப்பிக்கப்பட்டார். இந்நிகழ்ச்சியில் பலர் கலந்து சிறப்பித்தனர். சிறப்பான விருந்தோம்பலுடன் வருகையளித்த கழகத் தோழர்கள் அனைவரும் உணவுக்கு பின். தங்கள் கலந்துரையாடலில் 147ஆம் ஆண்டு தந்தை பெரியாரின் விழாவை பாடாங் செராய்யில் நடத்த வேண்டும் மென்று மகிழ்ச்சியுடன் வலியுறுத்தி கலைந்தனர். இந்நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்த கம்போங் ராஜா கிளைத் தலைவர் வ.கதிரவன் மற்றும் இந்நிகழ்ச்சிக்கு கைகொடுத்த பாடாங் செராய் உறவுகள் அனைவருக்கும் மதிக பாடாங் செராய் கிளை வழி நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.