வல்லம், செப். 20- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) தந்தை பெரியார் அவர்களின் 146 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா நடைபெற்றது.
பல்கலைக்கழக முகப்பில் உள்ள தந்தை பெரியாரின் சிலைக்குத் துணைவேந்தர் முனைவர் பேரா.வெ.இராமச்சந்திரன் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாணவர்களும் பேராசிரி யர்களும் திரளாகக் கலந்து கொண்டனர்.
பல்கலைக்கழக வளாகத்தில் அமைந் துள்ள பல்நோக்கு உள்விளையாட்டரங்கில் பதிவாளர் தலைமையில் ‘புதிய குரல்’ அமைப்பாளர் ஒவியா இன்றைய இளைஞர் களுக்குப் பெரியார் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார் அவர்தம் உரையில்:
“திருச்சியில் பெரியார் கல்லூரி அமைய பெருந்தொகையை நன்கொடை வழங்கியவர் தந்தை பெரியார். பெரியார் – சுயசிந்தனையாளர். ஜாதிக் கொடுமையினை சிறுவனாக இருந்தபோதே உணர்ந்து எதிர்த்தவர். படிப்பற்ற மக்களுக்கு படிப்பு கிடைக்க பெரியாரே காரணம். 1910ஆம் ஆண்டிலேயே கணவனை இழந்த தங்கை மகளுக்கு மறு மணத்தை நடத்தி வைத்தார். காசி நகரில் மதத்தின் பெயரால் நடைபெறும் அநீதிகளை கண்டு கொதித்தார். 1925 ஆம் ஆண்டு சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார். சமத்துவமே அதன் இலக்கு. சேரன்மாதேவி குருகுலப் பள்ளியில் நிலவிய ஏற்றத்தாழ்வை ஒழித்தார். மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம் மூலமாக மக்களுக்கு பகுத்தறிவு ஊட்டியவர். உலகில் மற்ற சிந்தனையாளர்கள் அறையில் அமர்ந்து கொண்டு பேசினார்கள். பெரியாரோ இயக்கம் கண்டார். களத்தில் பேராடினார். அவர் காண விரும்பிய சமுதாயத்தைப் படைப்போம்” என்று குறிப்பிட்டார்.
இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழக பதிவாளர் பேரா.சிறீவித்யா தலைமையுரையாற்றினார். அவர் தமது உரையில் “இனி வரும் உலகம் எனும் நூலினையும், பெண் ஏன் அடிமையானாள்? என்ற நூலினையும் மாணவர்கள் வாசிக்க வேண்டும்” என்றார்.
சமூகநீதி நாள்
உறுதிமொழி ஏற்பு
இதனைத் தொடர்ந்து பல்கலைக்கழகத்தில் பயிலும் முதலாமாண்டு வேதியியல் துறையின் மாணவி வரவேற்புரை வழங்கினார். விழாவில் மாணவர்கள் சமூக நீதிநாள் உறுதிமொழி ஏற்றனர். மேலும் அனைத்துக் கல்லூரி மாணவர்களிடையே நடைபெற்ற பேச்சுப் போட்டியில் கும்ப கோணம் அரசு கலைக் கல்லூரி மாணவி வி.சிபேகா முதல் பரிசையும், தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி மாணவி எஸ்.காயத்ரி இரண்டாம் பரிசையும், தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி மாணவர் ஜீ.பிரைசிங் ஜோஸ்வா மூன்றாம் பரிசையும், கட்டுரைப் போட்டியில் மன்னை இராஜகோபாலசுவாமி அரசினர் கலைக்கல்லூரி மாணவர் சிவசக்தி முதல் பரிசையும், பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவி கு.கார்த்திகா இரண்டாம் பரிசையும், பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவி மு.சிந்தனா மூன்றாம் பரிசையும், கவிதைப் போட்டியில் மன்னை இராஜகோபால சுவாமி அரசினர் கலைக்கல்லூரி மாணவர் கா.கார்த்திகேயன் முதல் பரிசையும், தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி மாணவர் ப.ஹரீஸ் இரண்டாம் பரிசையும், தஞ்சாவூர் பான் செக்கரஸ் மகளிர் கல்லூரி மாணவி நா.சுபா மூன்றாம் பரிசையும் பெற்றனர்.
பரிசு வழங்கல்
பெரியார் மணியம்மை பல்கலைக்கழக மாணவர்களிடையே நடைபெற்ற பேச்சு போட்டியில் இளங்கலை இதழியல் மற்றும் மக்கள் தொடர்பு மொழிகள் துறை முதலாமாண்டு மாணவி க.முத்தரசி முதல் பரிசையும், மின்னணு மற்றும் தொலைத் தொடர்பியல் துறை முதலாம் ஆண்டு மாணவி வி.கோ.மனோ ஹரிணி இரண்டாம் பரிசையும், இளங்கலை அரசியல் அறிவியல் துறை முதலாமாண்டு மாணவி இர.ஹரிணி மூன்றாம் பரிசையும், கவிதைப் போட்டியில் மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் மூன்றாம் ஆண்டு மாணவர் ச.தினேஷ் முதல் பரிசையும், மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் நான்காம் ஆண்டு மாணவி க.மஞ்சு மூன்றாம் பரிசையும், கட்டுரைப் போட்டியில் இளங்கலை அரசியல் அறிவியல் துறை முதலாமாண்டு மாணவி சீ. யுவசிறீ முதல் பரிசையும், இளங்கலை வேதியில் துறை முதலாமாண்டு மாணவி ஆர்.கமலி இரண்டாம் பரிசையும், முதுகலை தரவு அறிவியல் துறை முதலாமாண்டு மாணவி சே.ஜனனி மூன்றாம் பரிசையும் பெற்றனர். வேதியியல் துறை முதுகலை இரண்டாமாண்டு மாணவி ச.கவு.கமலிகா நன்றியுரை கூறினார். இளங்கலை மூன்றாம் ஆண்டு இயற்பியல் துறை மாணவி ந.கனிமொழி இணைப்புரை வழங்கினார்.
“புத்துலகச் சிற்பி” – கவியரங்கம்
பெரியார் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பல்கலைக்கழக வள்ளுவர் அரங்கில் கவிஞர் தஞ்சை இனியன் தலைமையில் “புத்துலகச் சிற்பி” எனும் பொதுத் தலைப்பில் கவியரங்கம் நடை பெற்றது. “புதுமை விரும்பி” எனும் தலைப் பில் தஞ்சை ராகவ் மகேஷ், “பகுத்தறிவு” எனும் தலைப்பில் முனைவர் செழியரசு, “பெண்ணுரிமை” எனும் தலைப்பில் மைதிலி தயாளன், “ஜாதி ஒழிப்பு” எனும் தலைப்பில் ப.ஹரிசு, “தொலைநோக்க” எனும் தலைப்பில் சின்ன வைரமுத்து கவிதை வாசித்தனர். கவியரங்கிற்கு வந்திருந்தோரை இளங்கலை அரசியல் அறிவியல் துறை இரண்டாம் ஆண்டு மாணவி சு.அனு வரவேற்றார். சு.ஜெயஜனனி நன்றியுரை கூறினார்.
பட்டிமன்றம்
பெரியார் பிறந்தநாளையொட்டி பல்கலைக்கழக அய்ன்ஸ்டீன் அரங்கத்தில் தகவலியல் துறைத் தலைவர் முனைவர்
ஆ.முத்தமிழ்ச்செல்வன் தலைமையில், “பெரியார் அதிகம் வலியுறுத்தியது பெண் விடுதலையே! ஜாதி ஒழிப்பே!” எனும் தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.
“பெண் விடுதலையே!” எனும் தலைப்பில் வீரமணி மோகனா தரமான வாழ்க்கை பொறியியல் ஆராய்ச்சி மய்யத்தின் மனநல ஆலோசகர் (பயிற்சியாளர்) இரா.அன்புமதி, மின்னணு மற்றும் தகவல் தொடர்பியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவி சி.கண் மணி, தகவலியல் துறை முதுகலை முதலா மாண்டு மாணவி க.கயல்விழி ஆகியோர் உரையாற்றினார்கள்.
“ஜாதி ஒழிப்பே” எனும் தலைப்பில் கணிதவியல் துறை ஆராய்ச்சி அறிஞர் அ.இர.ரவித்தா, கல்வியியல் மற்றும் அறிவியல் துறை நான்காம் ஆண்டு மாணவி க.திவ்யா, தகவலியல் துறை முதுகலை முதலாமாண்டு மாணவி சே.ஜனனி ஆகியோர் உரையாற்றினர். மின்னணு மற்றும் தகவல் தொடர்பியல் துறை இளங்கலை இரண்டாமாண்டு மாணவி சு.யாழினி வரவேற்புரை நிகழ்த்தினார். தி.யோகிதா நன்றியுரை கூறினார்.
இந்நிகழ்ச்சி ஏற்பாட்டினை பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம் மற்றும் வேதி யியல் துறையும், இணைந்து செய்திருந்தனர். இந்நிகழ்வில் கல்விப்புல முதன்மையர்கள், இயக்குநர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டுச் சிறப்பித்தனர்.