தி.மு.க. முப்பெரும் விழா பெரியார், அண்ணா, கலைஞர் விருதுகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார்

viduthalai
1 Min Read

தி.மு.கழகத் தலைவரும். தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் அவர்கள் நேற்று (17.9.2024) சென்னை, நந்தனம், ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில், பெரியார் விருதினை திருமதி பாப்பம்மாள் அவர்களுக்கும், அண்ணா விருதினை மிசா இராமநாதன் அவர்களுக்கும். கலைஞர் விருதினை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஜெகத்ரட்சகன் அவர்களுக்கும். பாவேந்தர் விருதினை கவிஞர் தமிழ்தாசன் அவர்களுக்கும், பேராசிரியர் விருதினை வி.பி. இராஜன் அவர்களுக்கும், மு.க. ஸ்டாலின் விருதினை ஒன்றிய மேனாள் இணை அமைச்சர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் அவர்களுக்கும் வழங்கி சிறப்பித்தார். இவ்விழாவில், தி.மு.கழக பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், பொருளாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர். பாலு, முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என். நேரு. துணை பொதுச் செயலாளர்கள் – ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் அய். பெரியசாமி, உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி, தி.மு.கழகத் துணைப் பொதுச் செயலாளர்கள் ஆ. ராசா எம்.பி., கனிமொழி கருணாநிதி எம்.பி., அந்தியூர் செல்வராஜ் எம்.பி., இளைஞர் அணிச் செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் – மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருமான மா. சுப்பிரமணியன், அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற சட்டமன்ற முன்னாள் இந்நாள் உறுப்பினர்கள், தி.மு.க. தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட தி.மு.கழகச் செயலாளர்கள். தி.மு.கழகத்தின் பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *