நாட்டு விடுதலைக்குப் பாடுபட்ட பலபேருள்
பாலகங் காதர்க்கு பார்ப்பனியம் பெருவிருப்பு
மூதறிஞர் இராசாசி நால்வருணம் வேண்டுபவர்
சேரன்மா தேவியில்நம் வ.வேசு. நெறிபிறழ்ந்தார்
கோக லேக்குப்பின் தலைமை ஏற்ற
காந்தி யாரும் வைக்கத்தில் வலுவிழந்தார்
அம்பேத்கர் அண்ணலோ தம்மபதம் போய்ச் சேர்ந்தார்;
தம் மக்கள் உய்வு பெற தமதுழைப்பைத் தந்து பின்னே
சூழ்நிலையால் தடம்மாறி இடறியவர் பலருள்ளும்
சூழ்ச்சிவலைப் பின்னலினால் சிக்குண்டு தவித்திட்ட
மக்கள் தமைக் காத்திடவே மனமுவந்து ஓடிவந்தே
மானமும் அறிவி(வ்)ரண்டும் மனிதர்க்கு அழகென்று
வாழ்நிலை காட்டிஒரு வழியமைதை்து முன்னடந்து
அறிவென்னும் ஆயுதத்தால் அவிழ்த்தெறிந்தும் அறுத்தெறிந்தும்
கடைசிவரை கலங்காமல் கைபிடித்துச் சிக்கவிழ்த்து
கரைசேர்த்த எங்களய்யா கருஞ்சட்டைப் பெரியாரே
நற்றமிழர் கொள்கையை நடைமுறைப் படுத்திய
சொற்புடைய தலைவரும்நம் பெரியாரே! மற்றெவர் யார்?
புலவர் உ.தேவதாசு,
சென்னை –600 053