தென்சென்னை மாவட்டம்: திருவல்லிக்கேணி அய்ஸ் அவுஸ் பகுதியில் தெருமுனைப் பிரச்சார கூட்டம்

Viduthalai
2 Min Read

அரசியல்

திருவல்லிக்கேணி, ஆக.5 29.07.2023, சனிக்கிழமை மாலை 6.30 மணி அளவில் திருவல்லிக்கேணி, அய்ஸ் அவுஸ் பகுதியில் உள்ள இருசப்பன் தெரு – பெசன்ட் சாலை இணைவில் தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகம் மற்றும் திருவல்லிக்கேணி பகுதி இளை ஞரணி சார்பில் “வைக்கம் போராட்ட நூற்றாண்டு – முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு மற்றும் கல்வி வள்ளல் காமராசர் பிறந்தநாள் தெரு முனைப் பிரச்சார கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் ச.மகேந்திரன் கூட்டத்திற்கு தலைமையேற்று உரையாற்றினார். மாவட்ட துணைச் செயலாளர் கோ.வீ.ராக வன் அனைவரையும் வரவேற்று உரை யாற்றினார். தலைமை கழக அமைப்பாளர் தே.செ.கோபால், மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், மாவட்டச் செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, மாவட்டத் துணைத் தலைவர் டி.ஆர். சேதுராமன் மற்றும் மாவட்டத் துணைச் செயலாளர் சா.தாமோதரன் ஆகியோர் முன்னிலை ஏற்றனர்.

மாநில இளைஞரணி துணைச் செய லாளர் மு.சண்முகப்பிரியன் தொடக்க உரையாற்றினார்.

கழக பேச்சாளர் தஞ்சை இரா.பெரியார் செல்வன்   உரையாற்றும்பொழுது, தந்தை பெரியார் அறிஞர் அண்ணா முத்தமி ழறிஞர் டாக்டர் கலைஞர், கல்வி வள்ளல் காமராஜர் ஆகியோர் ஏற்படுத்திய சமூக மாற்றங்களையும், சாதனைகளையும் எடுத்துக் கூறி அதன் பயனால் தாழ்த் தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் தன்மானம், பகுத்தறிவு, கல்வி அறிவு, வேலைவாய்ப்பு பெற்று சமூக உயர்நிலை அடைந்ததையும், மேலும் பல பயன்களை எடுத்துக் கூறியதுடன், தமிழ்நாடு முதலமைச்சர் மு .க.ஸ்டாலின் அவர்களின் சமூக தொண்டினையும், ஆட்சியை நடத்தும் பாங்கையும் விரி வாக எடுத்துக் கூறினார். மணிப்பூரில் நடக்கும் கொடுமைகளை எடுத்துக் கூறி, பெண்கள் வன்கொடுமை செய்யப்பட்ட தற்கு வன்மையானக் கண்டனத்தைப் பதிவு செய்தார். வாரிசு அரசியல் என்றால் என்ன? என்பதை விளக்கி, பிஜேபி தான் வாரிசு அரசியல் செய்கிறது என சுட்டிக் காட்டினார். மூடநம்பிக்கைகளை விளக்கி கூறி மக்களுக்கு பகுத்தறிவு ஊட்டும் வகையில் எழுச்சிமிகு உரையாற்றினார்.

சிறப்பு பேச்சாளர் தஞ்சை 

இரா. பெரியார் செல்வன் அவர்களுக்கு மாணவர் கழக மாநில அமைப்பாளர் வி.தங்கமணி பாராட்டி பயனாடை அணிவித்தார். பெரியார் நூலக வாசகர் வட்ட தலைவர் ஆ. வீரமர்த்தினி அவர் களுக்கு மாணவர் கழக செயலாளர் வீ.யாழ்ஒளி பயனாடை அணிவித்தார்.

தென் சென்னை மாவட்ட இளை ஞரணி தலைவர் துரை.அருண், இளை ஞரணி செயலாளர் ந.மணிதுரை, இளை ஞரணி துணைத் தலைவர் இரா.பிரபாக ரன், இளைஞரணி துணைச் செயலாளர் இரா.மாரிமுத்து, மகளிரணித் தலைவர் வி.வளர்மதி, பி. அஜந்தா, வி. தங்கமணி, வி.யாழ்ஒளி, மா.சண்முகலட்சுமி, ச.மாரி யப்பன், வடசென்னை மாவட்ட செய லாளர் சு.அன்புசெல்வன், ஆவடி மாவட்ட துணைச் செயலாளர் க.தமிழ்ச் செல்வன், தாம்பரம் நகர செயலாளர் சு.மோகன்ராஜ், ச.சந்தோஷ், ஆலந்தூர் சிவா, ஒளிப்படக் கலைஞர் பா. சிவக் குமார், கா.சுந்தர், கோல்டு பாட்ஷா, அய்ஸ் அவுஸ் உதயா ஆகியோருடன் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு ஆர்வமுடன் செவிமடுத்தனர்.

நிகழ்ச்சியின் முடிவில் கோ.அரிகரன் நன்றி உரையாற்றினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *