தஞ்சை தெற்கு ஒன்றியம் தாழம்பட்டியில் கழக இளைஞரணி புதிய கிளை துவக்க விழா மற்றும் கலந்துரையாடல்

viduthalai
1 Min Read

தஞ்சாவூர், செப். 18– 13-09-2024 மாலை தஞ்சாவூர் தெற்கு ஒன்றியம் தாழம் பட்டியில் நடைபெற்ற திராவிடர் கழக இளைஞரணி துவக்க விழா கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்ற அனைவரையும் வரவேற்று தஞ்சாவூர் மாவட்ட இளைஞரணி செயலாளர் ஆ.பிரகாஷ் வரவேற்பு ரையாற்றினார். மாவட்ட தலை வர் வழக்குரைஞர் அமர்சிங் தலை மையேற்று உரையாற்றினார்.

மாநில ஒருங்கிணைப்பாளர் ஒரத்தநாடு இரா.குணசேகரன், தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுப்பட்டு இராமலிங்கம், பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் கோபு.பழனிவேல், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் வெற்றிகுமார், மாநில கிராமப்புற பிரச்சார செயலாளர் அதிரடி க.அன்பழகன், மாநில மாணவர் கழக செயலாளர் இரா. செந்தூரபாண்டியன், மாநில கலைத்துறை செயலாளர் தெற்கு நத்தம் ச.சித்தார்த்தன் ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர்.

மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயகுமார் திராவிடர் கழகத்தின் வரலாறுகளையும், சிறப்புகளையும் பெரியாரின் கருத்துகளையும் தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்களின் அளப்பரிய பணிகளையும் பொதுமக்களுக்கு எடுத்துரைத்து சிறப்புரையாற்றினார். மேலும் தாழம் பட்டி கவிஞர் கரு.அய்யாச்சாமி பெரியாரைப்பற்றியும், சுயமரியாதை பற்றியும் சிறந்த கவிதையுடன், உரை யும் நிகழ்த்தினார். மாநகர துணைச்செயலாளர் இளவரசன், அருமலை ரமேஷ், பேராசிரியர் ந.எழிலரசன், பேராசிரியர் சு.இரா ஜேந்திரன் மற்றும் தாழம்பட்டி கா.ஆறுமுகம்,ஆ.விக்னேஷ், மாரிமுத்து, பொன்னுச் சாமி, விஜய், தினேஷ், பழனிவேல், அன் பரசன்,சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். இறுதியாக தாழம்பட்டி கிளைக் கழக உறுப்பினர் அன்பரசன் நன்றி கூறினார். புதிய இளைஞர் அணி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *