சிறீநகர், செப்.17- ஜம்மு –- காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் 24 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் நாளை (18.9.2024) நடைபெறுகிறது. இதனையடுத்து முதல் கட்ட தேர்தல் நடைபெறும் 24 தொகுதிகளிலும் நேற்று (16.9.2024) மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்தது. ஜம்மு – காஷ்மீரில் செப்டம்பர் 19ஆம் தேதி பிரதமர் மோடி மீண்டும் பிரச்சாரம் செய்கிறார்.
ஜம்மு – காஷ்மீரில் செப்டம்பர் 18, செப்டம்பர் 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தல் 24 தொகுதிகளில் நடைபெற உள்ளது.
ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்புத் தகுதி வழங்கிய அரசியல் சாசனத்தின் 370ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்ட பின்னர் நடைபெறும் முதல் தேர்தல் இது. ஜம்மு – காஷ்மீரில் 2014இல்தான் கடைசியாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.
முதல் கட்ட தேர்தல் – காஷ்மீர் பிராந்தியத்தில் 16 தொகுதிகளிலும் ஜம்முவில் 8 தொகுதிகளிலும் நடைபெற உள்ளது. ஜம்மு – காஷ்மீரில் பாஜக, காங்கிரஸ்- தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி, மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் மாநில கட்சிகள் களம் காண்கின்றன.
ஜம்மு – காஷ்மீர் முதல் கட்ட தேர்தலில் 23 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். முதல் கட்ட தேர்தலில் மொத்தம் 219 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெகபூபா முப்தியின் மகள் இல்திஜா முப்தி பிஜ்பிகாரா தொகுதியில் களம் காண்கிறார்.
ஜம்மு – காஷ்மீரில் முதல் கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் இந்திய தேர்தல் ஆணையம் அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளது. ஜம்மு – காஷ்மீர் தேர்தலை சீர்குலைக்கும் பயங்கரவாதிகளின் நடவடிக்கைகளை முறியடிக்க பாதுகாப்புப் படையினரும் தயார் நிலையில் உள்ளனர்.
புகையிலையால் தீமைகள்!
கல்லூரிகளில் விழிப்புணர்வை தீவிரப்படுத்த யுஜிசி அறிவுறுத்தல்!
புதுடில்லி, செப்.17- நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள் உள்ளிட்ட உயா்கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவா்களிடம் புகையிலை பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்து தீவிர விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து யுஜிசி செயலா் மனீஷ் ஆா்.ஜோஷி அனைத்து உயா்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் 13 முதல் 15 வயதுக்குள்பட்ட பள்ளி மாணவா்களில் 8.5 சதவீதம் போ் புகையிலையை ஏதேனும் ஒரு வடிவத்தில் பயன்படுத்துகின்றனா். ஆண்டுதோறும் 5,500-க்கும் மேற்பட்ட குழந்தைகள் புகையிலையைப் பயன்படுத்தத் தொடங்குகின்றனா்.
வாழ்நாள் முழுவதும் புகையிலையைப் பயன் படுத்துவோரில் 55 சதவீதம் போ் 20 வயதுக்கு முன்பிருந்தே அதைப் பயன்படுத்தத் தொடங்கி விடுகின்றனா். அதேபோல் இ-சிகரெட்டுகள் உடலில் மரபணு பாதிப்பு, கருவின் வளா்ச்சி, புற்றுநோய், சுவாசப் பிரச்னைகள், இதயம், நரம்பியல் கோளாறுகள் என பல்வேறு பிரச்னைகள், நோய் களுக்கு வழிவகுக்கின்றன.
கல்வி நிறுவனங்களை புகையிலை இல்லாத வளாகமாக மாற்ற, ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் கடந்த 2019-இல் திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதில், புகையிலைப் பொருள்களின் விற்பனை, பயன்பாடு தொடா்பாக சட்ட விதிகளை சிறப்பாகச் செயல் படுத்துதல், புகையிலையால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துதல், எச்சரிக்கை வாசகங்கள், கல்வி நிறுவனங்களில் செயல்படும் அங்காடிகளுக்கான கட்டுப்பாடுகள் என பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
எனவே, அதைப் பின்பற்றி அனைத்து உயா்கல்வி நிறுவனங்களும் தங்களது வளாகங்களை புகையிலை, எலக்ட்ரானிக் சிகரெட் மற்றும் பிற போதைப் பொருள்களின் பயன்பாடில்லாத வளாகங்களாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். புகையிலையால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவா்களிடம் தீவிர விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.