பெரியார் மருந்தியல் கல்லூரியில் உடல் உறுப்புக்கொடை உறுதிமொழி ஏற்பு

1 Min Read

அரசியல்

திருச்சி, ஆக. 5- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் உடல் உறுப் புக் கொடை குறித்த விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி 3.8.2023 அன்று முதல்வர் முனைவர் இரா.செந்தாமரை தலை மையில் நடைபெற்றது. 

பெரியார் மணியம்மை மருத்துவமனையின் மருத்துவ அலுவலர் மரு. பி. மஞ்சுளா வாணி, பெரியார் மருந்தியல் கல்லூரியின் பேராசிரியர் முனைவர் அ.மு. இஸ் மாயில், துணை முதல்வர் முனைவர் கோ. கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் முன் னிலை வகித்த இந்நிகழ்ச் சியில் மாணவர்கள் உடல் உறுப்புக்கொடை குறித்த உறுதிமொழியினை ஏற்றனர். மேலும் இந்நிகழ்ச்சியில் உறுப்புக் கொடை குறித்த விழிப்பு ணர்வும் மாணவர்களுக்கு நாட்டு நலப்பணித் திட் டத்தால் வழங்கப்பட்டது.  பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்த இந் நிகழ்ச்சியினை நாட்டு நலப்பணித்திட்ட அலுவ லர் பேரா. அ. ஜெசிமா பேகம் சிறப்பாக ஒருங்கி ணைத்திருந்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *