தந்தை பெரியார் பிறந்த நாள் இன்று (17.9.2024) தலைவர்கள் வாழ்த்து

1 Min Read

தேஜஸ்வி வாழ்த்துச் செய்தி

பீகார் மேனாள் துணை முதலமைச்சரும், தற்போதைய பீகார் மாநில எதிர்கட்சித் தலைவருமான தேஜஸ்வி, தந்தை பெரியார் பிறந்தநாள் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.
ஹிந்தியில் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியின் தமிழாக்கம்
பகுத்தறிவு, அறிவியல் அணுகுமுறை, மக்கள் உரிமைகள், சுயமரியாதை மற்றும் ஒடுக்கப்பட்டோரின் முன்னேற்றத்திற்காக குரல் கொடுத்த சமத்துவம் மற்றும் அடக்குமுறையில் இருந்து சாமான்ய மக்கள் விடுதலை பெறுவதற்கான புரட்சிக்கான மாபெரும் ஆதரவாளர், புரட்சியாளர் மற்றும் வாழ்நாள் முழுவதும் மத மூடநம்பிக்கைகள், போலித்தனம், சடங்குகள், ஜாதியம், வர்ணாசிரம முறை மற்றும் பெண்கள் மீதான சமூக அடக்குமுறைகளை கடுமையாக எதிர்த்த மாபெரும் சிந்தனையாளரும் சமூக புரட்சியாளருமான மதிப்பிற்குரிய ஈ.வெ. ராமசாமி பெரியார் அவர்களுக்கு அவரது பிறந்த நாளில் கோடானுகோடி வணக்கங்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *