70 மாணவர்களுடன் கடலூர் மாவட்டம், நடுவீரப்பட்டில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை தொடங்கியது

0 Min Read

அரசியல்

கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு, வள்ளலார் ஞானாலயத்தில் 5.8.2023  அன்று பெரியாரியல் பயிற்சிப் பட்டறை 70 மாணவர்களுடன் தொடங்கியது. ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் என்.இராமலிங்கம் தொடங்கிவைத்து உரையாற்றினார். கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் – “தந்தை பெரியார் ஓர் அறிமுகம்” என்ற தலைப்பில் முதல் வகுப்பெடுத்தார். கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு – “பார்ப்பனப் பண்பாட்டு படையெடுப்பு” என்ற தலைப்பில் இரண்டாவது வகுப்பெடுத்தார். திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் ஒருங்கிணைத்து நடத்தினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *