மக்கள், தலையில் இடியை இறக்கிய ஒன்றிய அரசு

viduthalai
1 Min Read

சென்னை, செப்.16 ஒன்றிய அரசால் இதர வரிகளையும் சேர்த்து சமையல் எண்ணெய் மீதான வரி 27.5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது குறித்து ஒன்றிய அரசின் அதிகாரி ஒருவர் கூறுகையில் இதன் விளைவாக சமையல் என்ணெய் உற்பத்தியாளர்கள், விவசாயிகளிடமிருந்து சோயாபீன் பயிர்களை அதிகளவில் கொள்முதல் செய்து, சோயாபீன் பயிர்கள் விலை அதிகரித்து, விவசாயிகளுக்கு பயன் அளிக்கும் என தெரிவித்துள்ளார். பாஸ்மதி ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த குறைந்தபட்ச ஏற்றுமதி விலை என்ற நிபந்தனை நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். வெங்காயத் தின் மீதான ஏற்றுமதி வரியும் 20 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக கூறினார். சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் மீதான அடிப்படை வரி 32 சதவீதமாக உயர்த்தப் பட்டுள்ளது. இவற்றின் விளைவாக பாஸ்மதி, வெங்காயம், கடுகு, நிலக் கடலை, சூரியகாந்தி விவசாயிகளுக்கு பலன் கிடைக்கும் என்றார்.

ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர், செப்.16 காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை காரணமாக ஒகேனக்கல் காவிரியில், நேற்று காலை விநாடிக்கு 18,000 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேட்டூர் அணைக்கு நேற்று காலை நிலவரப்படி 14,629 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணை யின் நீர்மட்டம் 111.19 அடி யாகவும், நீர் இருப்பு 80.11 டிஎம்சியாகவும் உள்ளது.

 

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *