மேட்டுப்பாளையம் சு. வேலுசாமி இல்ல வாழ்க்கை இணையேற்பு விழா

viduthalai
1 Min Read

மேட்டுப்பாளையம், செப். 16- மேட்டுப் பாளையம் மாவட்ட தலைவர் சு. வேலுசாமி அவர்களது இல்ல வாழ்க்கை இணையேற்பு விழா மேட்டுப்பாளையம் இ.எம்.எஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட கழக தலைவர் சு.வேலுசாமி வரவேற்புரை ஆற்ற கழக பேச்சாளர் இரா. பெரியார் செல்வன் அவர்கள் தலைமையேற்று விழாவினை நடத்தி வைத்தார். மணமக்கள் வே.வீரமணி, ம. அனிதா ஆகியோர் வாழ்க்கை இணையேற்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். திராவிடர் கழக மருத்துவர் அணி தலைவர் இரா.கவுதமன், பொதுக்குழு உறுப்பினர் பழ.அன்பரசு, கழக மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா. குணசேகரன், இரா. ஜெயக்குமார், மேட்டுப்பாளையம் நகர்மன்ற துணைத் தலைவர் அருள் வடிவு, காரமடை நகர்மன்ற தலைவர் உஷா வெங்கடேஷ், கோபி மாவட்ட தலைவர் வழக்குரைஞர் சென்னியப்பன், நீலகிரி மாவட்ட தலைவர் நாகேந்திரன், கோவை மாவட்ட தலைவர் சந்திரசேகர்,மேட்டுப்பாளையம் மாவட்ட செயலாளர் கா.சு. அரங்கசாமி, திருப்பூர் மாவட்ட தலைவர் யாழ். ஆறுச்சாமி, மாநில அமைப்பாளர் த. சண்முகம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

இந்நிகழ்வில் திருப்பூர் வழக்குரைஞர் பாண்டியன்,கோவை மாவட்ட மகளிர் தலைவர் முத்துமணி,கலைச்செல்வி,ராஜேஸ்வரி, பொள்ளாச்சி மாவட்ட தலைவர் மாரிமுத்து, தமிழ் முரசு, ஆனந்தராசு, செந்தில்நாதன், திராவிட மணி,மேட்டுப்பாளையம் தோழர்கள் செல்வராசு, முருகசாமி, மேட்டுப்பாளையம் மாவட்ட இளைஞரணி தலைவர் மு.வீரமணி, இளைஞர் அணி செயலாளர் பிரதீப், தமிழ்மணி, நகர தலைவர் கோ. அர.பழனிசாமி, நகர செயலாளர் வெ. சந்திரன், காரமடை ஒன்றிய தலைவர் ஏ.எம். ராஜா, மேனாள் மாவட்ட தலைவர் பா.பாலசுப்பிரமணியன், லியாகத் அலி, பொள்ளாச்சி செழியன், வீரமலை, பாலகிருஷ்ணன், ரங்கராஜ்,சுந்தரமூர்த்தி, உட்பட ஏராளமான கழகத் தோழர்கள் குடும்பம் குடும்பமாய் பங்கேற்றார்கள். நிகழ்ச்சியை தஞ்சாவூர் நகர செயலாளர் தமிழ்ச்செல்வன் தொகுத்து வழங்கினார் மணமகளின் தந்தை ம. காமராஜ் நன்றி கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *