மண்ணச்சநல்லூர், செப்.16- இலால்குடி கழக மாவட்டம் மண்ணச்சநல்லூர் நகரம் மற்றும் ஒன்றிய கழக கலந்துரையாடல் கூட்டம் ஒன்றியத் தலைவர் கு.பொ.பெரியசாமி தலைமையில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்களின் 146வது பிறந்தநாளை 17-09-2024 அன்று நகரம் மற்றும் ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில் வால்மானபாளையம் பெரியார் மன்றத்தில் அமைந்துள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து பின்னர் கிளைக் கழகங்களில் உள்ள தோழர்கள் இல்லங்கள் மற்றும் பொது இடங்களில் கழக கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி சிறப்புடனும் எழுச்சியுடனும் கொண்டாடுவது எனவும் இறுதியில் சிறுகனூர் பெரியார் உலகத்திற்கு வேன் மற்றும் இரு சக்கர வாகனங்களில் சென்று அங்கு நடைபெறும் கொடியேற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது என தீர்மானிக்கப்பட்டது.
கூட்டத்தில் நகரத் தலைவர் மூ.முத்துசாமி நகரச் செயலாளர் க.பாலச்சந்திரன் மாவட்ட இளைஞரணித் தலைவர் க.ஆசைத்தம்பி மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் கோ.பாலசுப்பிரமணியன் ஒன்றியச் செயலாளர் பாச்சூர் இராசேந்திரன் மேனாள் மாவட்டச் செயலாளர் க.சிவசங்கரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.