மண்ணச்சநல்லூர் நகரம் மற்றும் ஒன்றிய திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்

1 Min Read

மண்ணச்சநல்லூர், செப்.16- இலால்குடி கழக மாவட்டம் மண்ணச்சநல்லூர் நகரம் மற்றும் ஒன்றிய கழக கலந்துரையாடல் கூட்டம் ஒன்றியத் தலைவர் கு.பொ.பெரியசாமி தலைமையில் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்களின் 146வது பிறந்தநாளை 17-09-2024 அன்று நகரம் மற்றும் ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில் வால்மானபாளையம் பெரியார் மன்றத்தில் அமைந்துள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து பின்னர் கிளைக் கழகங்களில் உள்ள தோழர்கள் இல்லங்கள் மற்றும் பொது இடங்களில் கழக கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி சிறப்புடனும் எழுச்சியுடனும் கொண்டாடுவது எனவும் இறுதியில் சிறுகனூர் பெரியார் உலகத்திற்கு வேன் மற்றும் இரு சக்கர வாகனங்களில் சென்று அங்கு நடைபெறும் கொடியேற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது என தீர்மானிக்கப்பட்டது.

கூட்டத்தில் நகரத் தலைவர் மூ.முத்துசாமி நகரச் செயலாளர் க.பாலச்சந்திரன் மாவட்ட இளைஞரணித் தலைவர் க.ஆசைத்தம்பி மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் கோ.பாலசுப்பிரமணியன் ஒன்றியச் செயலாளர் பாச்சூர் இராசேந்திரன் மேனாள் மாவட்டச் செயலாளர் க.சிவசங்கரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *