பகுத்தறிவாளர் கழகத் தோழர்களுக்கு குறிப்பாக பொறுப்பாளர்களுக்கு…

1 Min Read

வருகிற 20.8.2023 அன்று, டாக்டர் நரேந்திர தபோல்கரின் நினைவு நாள். அதனை அறிவியல் மனப்பாங்கு பரப்பும் நாளாக நாடு முழுவதும் கொண்டாடப் படுவதென இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது அறிய மகிழ்கிறோம்.

நாமும் தமிழ்நாட்டில் மூடநம்பிக்கைகளை எதிர்த்து, அறிவியல் மனப்பாங்கினை பரப்பிடும் பரப்புரை கூட்டங்களை ஒருவாரம் முழுவதும் பற்பல ஊர்களிலும் தொடர் பரப்புரைக் கூட்டங்களாக நடத்தி, விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மிகவும் அவசியம்.

ஆகஸ்ட் 20 முதல் இம்மாதம் முடியும் வரை (ஆகஸ்ட் 31 வரை) பிரச்சாரக் கூட்டங்களை மக்களுக்கு தெளிவுறுத்திடும் வகையில் ஏற்பாடு செய்தல் அவசியம்.

இதனை தமிழ்நாடு பகுத்தறிவாளர் கழகம் மற்றும் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் முன்னின்று நடத்துவது சாலச் சிறப்பாக இருக்கும். விரைவில் பேச்சாளர்களைத் தருகிறோம். ஏற்பாடுகளைச் செய்க!

ஆசிரியர் கி.வீரமணி

புரவலர், பகுத்தறிவாளர் கழகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *