தெற்கு நத்தம் சித்தார்த்தன் அன்னையார் மறைவு தமிழர் தலைவர் ஆசிரியர் இரங்கல்

1 Min Read

தெற்கு நத்தம் சித்தார்த்தன் அன்னையார் மறைவு தமிழர் தலைவர் ஆசிரியர் இரங்கல்
திராவிடர் கழக மாநில கலைத்துறைச் செயலாளரும், வீதிநாடக இயக்குநரும் கல்வியாளருமான தெற்குநத்தம் ச.சித்தார்த்தன் அவர்களின் தாயார் திருமதி. ச.சரோஜா சண்முகம் (வயது 85) மறைந்தார் என்ற செய்தி கேட்டு ஆழ்ந்த வருத்தம் அடைந்தோம்.

கழகக் கொள்கையில் தீவிரமானவராகவும், நம் மீது பாசம் கொண்டவராகவும் இருந்தவர்.
தோழர் சித்தார்த்தன் வளர்ச்சியில் அக்கறை கொண்டு, அதற்குக் காரணமாகவும் அமைந்தவர். அவரது பேரப் பிள்ளைகள் திருமணம் உள்பட பல நிகழ்வுகளிலும் பங்கேற்கும்போது மகிழ்வோடு பழகக் கூடியவர். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும், மறைவால் வாடும் மகன்கள் தோழர் ச.சித்தார்த்தன், ச. முத்துச்செல்வன், மகள் ச.சித்ரா, மருமக்கள், பேரப்பிள்ளைகள் ஆகியோருக்கும் தோழர்களுக்கும் நமது ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

– கி.வீரமணி
தலைவர்,, திராவிடர் கழகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *