தெற்கு நத்தம் சித்தார்த்தன் அன்னையார் மறைவு தமிழர் தலைவர் ஆசிரியர் இரங்கல்
திராவிடர் கழக மாநில கலைத்துறைச் செயலாளரும், வீதிநாடக இயக்குநரும் கல்வியாளருமான தெற்குநத்தம் ச.சித்தார்த்தன் அவர்களின் தாயார் திருமதி. ச.சரோஜா சண்முகம் (வயது 85) மறைந்தார் என்ற செய்தி கேட்டு ஆழ்ந்த வருத்தம் அடைந்தோம்.
கழகக் கொள்கையில் தீவிரமானவராகவும், நம் மீது பாசம் கொண்டவராகவும் இருந்தவர்.
தோழர் சித்தார்த்தன் வளர்ச்சியில் அக்கறை கொண்டு, அதற்குக் காரணமாகவும் அமைந்தவர். அவரது பேரப் பிள்ளைகள் திருமணம் உள்பட பல நிகழ்வுகளிலும் பங்கேற்கும்போது மகிழ்வோடு பழகக் கூடியவர். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும், மறைவால் வாடும் மகன்கள் தோழர் ச.சித்தார்த்தன், ச. முத்துச்செல்வன், மகள் ச.சித்ரா, மருமக்கள், பேரப்பிள்ளைகள் ஆகியோருக்கும் தோழர்களுக்கும் நமது ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
– கி.வீரமணி
தலைவர்,, திராவிடர் கழகம்