கோவை, செப்.15 2000 ஆண்டுக்கு முன்பு பிறந்தவர்கள் 2024 டிசம்பருக்குள் பிறப்புச் சான்றிதழைப் பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
கோவையில் 2000ஆம் ஆண்டுக்கு முன்பு பிறந்தவர்கள் 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் பிறப்புச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
கடவுச்சீட்டு மற்றும் பிற அதிகாரப்பூர்வ ஆவணங் களுக்கு விண்ணப்பிக்கப் பிறப்புச் சான்றிதழ் தேவை என்பதால், பலரும் பிறப்புச் சான்றிதழ் பெறுவதற்காகக் கோவை மாநகராட்சி அலுவலகத்தை அணுகுகின்றனர்.
கோவை மாநகராட்சி 2000ஆம் ஆண்டுக்கு முன் பிறந்தவர்களிடமிருந்து பிறப்புச் சான்றிதழுக்கான விண்ணப்பங்கள் பெறுகிறது. 1990களில் பிறந்தவர்கள் டிசம்பர் 31, 2024க்குள் பிறப்புச் சான்றிதழைப் பெறலாம் என்ற மாநில அரசின் சமீபத்திய அறிவிப்பைத் தொடர்ந்து, நகர எல்லைக்குள் உள்ள மருத்துவமனையில் குழந்தை பிறந்தால், அருகில் உள்ள மாநகர வார்டு அலுவலகத்தில் பிறப்பு பதிவு செய்யப்பட்டு, இணைய வழி மூலம் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
இருப்பினும், 2000ஆம் ஆண்டுக்கு முன்பு பிறந்த பலருக்கு இன்னும் பிறப்புச் சான்றிதழ் இல்லை.
கடவுச்சீட்டு மற்றும் பிற அதிகாரப்பூர்வ ஆவணங்களுக்கு விண்ணப்பிக்கப் பிறப்புச் சான்றிதழ் தேவை என்பதால், பலர் உதவிக்காக மாநகராட்சி தலைமை அலுவலகத்தை அணுகுகின்றனர்.
0ஆம் ஆண்டின் பிறப்பு மற்றும் இறப்பு பதிவுச் சட்டத்தின் விதிகளின் கீழ், 2000 ஆம் ஆண்டுக்கு முன் பிறந்தவர்கள் டிசம்பர் 31, 2024க்குள் பிறப்பைப் பதிவு செய்ய வேண்டும் அல்லது அவர்களின் பெயர்கள் நிரந்தரமாகப் பதிவு செய்யப்படாது என தெரிவிக்கின்றன.
இந்தச் செயல்முறைக்கு அரசாங்கம் ஏற்ெகனவே 25 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்கியுள்ளது, மேலும் நீட்டிப்புகள் வழங்கப்படாது. பிறப்புச் சான்றிதழ் இல்லாதவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அல்லது உறவினர்கள் ேகாவை மாநகராட்சி அலுவலகத்திற்குச் சென்று பிறப்பு மற்றும் இறப்பு பதிவுச் செயல்முறையை முடிக்கப் பதிவாளரைச் சந்திக்கலாம்.
இந்த ஆண்டு பிறந்த குழந்தைகளுக்கு, பிறந்த ஓராண் டுக்குள், அந்தந்த மாநகராட்சி வார்டு அலுவலகத்திற்குச் சென்று, பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் பிறப்பைப் பதிவு செய்து, சான்றிதழைப் பெறலாம்.