ஜெயங்கொண்டத்தில் அறிஞர் அண்ணாவின் 116ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு அவரின் சிலைக்கு திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் தலைமையில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.கண்ணன் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. ஜெயங்கொண்டம் தி.மு.க. நகரச் செயலாளர் வெ.கோ. கருணாநிதி, தலைமைக் கழக அமைப்பாளர் க. சிந்தனைசெல்வன், அரியலூர் மாவட்ட கழகத் தலைவர் விடுதலை நீலமேகம், மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன், பொதுக் குழு உறுப்பினர் சி. காமராஜ், சு. அறிவன் மற்றும் திராவிடர் கழக, தி.மு.க. பொறுப்பாளர்களும், தோழர்களும் உடன் உள்ளனர். (ஜெயங்கொண்டம், 15.9.2024)