தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (15.9.2024) அறிஞர் அண்ணா அவர்களின் 116ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை, அண்ணா சாலையில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா அவர்களின் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், துணை மேயர், தலைமைச் செயலாளர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.