திருத்துறைப்பூண்டி ஒன்றிய, நகரத்தில் தந்தை பெரியார் 146 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா – கலந்துரையாடலில் முடிவு

1 Min Read

திருத்துறைப்பூண்டி, செப்.14- திருத்துறைப் பூண்டி ஒன்றிய, நகர கலந்துரையாடல் கூட்டம் விளக்குடி ந.செல்வம் இல்லத்தில் 9.9.2024 மாலை 5 மணிக்கு நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைமை கழக அமைப்பாளர் சு.கிருஷ்ணமூர்த்தி தலை மையில் ஒன்றிய தலைவர் ச.பொன்முடி அவர்களின் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் தந்தை பெரியார் 146 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவை ஒன்றியம், நகரம் முழுவதும் கொடியேற்றி பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டது.

மாவட்டக் கழக முடிவின்படி செப்டம்பர் மாதம் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா பரப்புரை கூட்டம் ஒன்றியத்தின் சார்பில் விளக்குடி, கச்சனம் ஆகிய ஊர்களிலும், நகரத்தின் சார்பில் மாராச்சேரி, திருத்துறைப்பூண்டி ஆகிய ஊர்களில் நடத் துவது என்று முடிவு செய்யப்பட்டது. கூட்டத் தில் இரா.அறிவழகன், ந.செல்வம், C ஆகியோர் கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *