திருத்துறைப்பூண்டி, செப்.14- திருத்துறைப் பூண்டி ஒன்றிய, நகர கலந்துரையாடல் கூட்டம் விளக்குடி ந.செல்வம் இல்லத்தில் 9.9.2024 மாலை 5 மணிக்கு நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைமை கழக அமைப்பாளர் சு.கிருஷ்ணமூர்த்தி தலை மையில் ஒன்றிய தலைவர் ச.பொன்முடி அவர்களின் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் தந்தை பெரியார் 146 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவை ஒன்றியம், நகரம் முழுவதும் கொடியேற்றி பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டது.
மாவட்டக் கழக முடிவின்படி செப்டம்பர் மாதம் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா பரப்புரை கூட்டம் ஒன்றியத்தின் சார்பில் விளக்குடி, கச்சனம் ஆகிய ஊர்களிலும், நகரத்தின் சார்பில் மாராச்சேரி, திருத்துறைப்பூண்டி ஆகிய ஊர்களில் நடத் துவது என்று முடிவு செய்யப்பட்டது. கூட்டத் தில் இரா.அறிவழகன், ந.செல்வம், C ஆகியோர் கலந்து கொண்டனர்.