சென்னை, செப்.14- சென்னை மாவட்ட திராவிட இயக்க தமிழர் பேரவை ஏற்பாட்டில் அரசியல் பயிலரங்கம்-11 சென்னை தேனாம்பேட்டை அன்பகத்தில் 15.9.2024 ஞாயிறன்று காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறுகிறது.
காலை 10 மணி முதல் 11.15 மணி வரை முதல் அமர்வில் பெரியாரும் இட ஒதுக்கீடும் எனும் தலைப்பில் அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் கோ.கருணாநிதி, காலை 11.30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை இரண்டாம் அமர்வில் அறிஞர் அண்ணாவும் மாநில சுயாட்சியும் எனும் தலைப்பில் தன்னாட்சித் தமிழகம் எழுத்தாளர் ஆழி.செந்தில்நாதன், பிற்பகல் 2 மணி முதல் 3.15 மணி வரை மூன்றாம் அமர்வில் கலைஞரும் சமூகநீதியும் எனும் தலைப்பில் சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் நா.எழிலன், மாலை 3.30 மணி முதல் 5 மணி வரை நான்காம் அமர்வில் திராவிட இயக்கமும் தமிழ்த்தேசியமும் எனும் தலைப்பில் திராவிட இயக்க தமிழர் பேரவைத் தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் ஆகியோர் உரையாற்றுகிறார்கள்.
முன்பதிவுக்கு 9994113558 கட்டணம் ரூ.100 (மதிய உணவு உண்டு)