உரத்தநாட்டில் வைக்கம் நூற்றாண்டு விழா, முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா, திராவிட மாடல் ஆட்சி சாதனை விளக்க பொதுக்கூட்டம்

Viduthalai
3 Min Read

அரசியல்

உரத்தநாடு,ஆக.6 – உரத்தநாடு ஒன்றிய, நகர திராவிடர் கழகத் தின் சார்பில், வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா, முத்தமிழறிஞர் கலைஞர் நூற் றாண்டு விழா, திராவிட மாடல் ஆட்சி சாதனை விளக்க பொதுக் கூட்டம் 3.8.2023 அன்று மாலை 6 மணியளவில், உரத்தநாடு சைவமடத் தெருவில்,  உரத்தநாடு நகர துணைத் தலைவர் மு.சக்தி வேல் தலைமையில் நடை பெற்றது.

ஒன்றிய அமைப்பாளர் பு.செந் தில்குமார், ஒன்றிய செயலாளர் மாநல்.பரமசிவம், ஒன்றிய தலை வர் த.ஜெகநாதன், மாவட்ட செயலாளர் அ.அருணகிரி ஆகி யோர் முன்னிலையேற்று உரை யாற்றினர். மாநில இளைஞரணி துணை செயலாளர் முனைவர் வே.இராஜவேல் கருத்துரையாற்றினார்.

அரசியல்

தலைமை கழக அமைப்பாளர் குடந்தை க.குருசாமி தொடக்கவுரையாற்றினார். தஞ்சை மாவட்ட தலைவர் சி.அமர்சிங் சைவமடத் தெருவில் கழக கொடியினை ஏற்றி வைத்து கொள்கை விளக்கவுரையாற்றினார். கழக மாநில ஒருங்கிணைப் பாளர் இரா.ஜெயக்குமார் கருத் துரையாற்றினார்.

கழகப் பேச்சாளர் இராம.அன் பழகன் உரையில், நூறு ஆண்டு களுக்கு முன்னால் கேரள மாநிலம் வைக்கத்தில் நிலவிய ஜாதி இழிவையும், அதனை எதிர்த்து தந்தை பெரியார் நடத்திய போராட்டத்தினையும், தந்தை பெரியார் கைதான பிறகு அவ ரது மனைவி நாகம்மையார், சகோதரி கண்ணம்மாள் ஆகியோர் போராட்டத்தினை முன்னெடுத்து வெற்றிபெற்றதை விளக்கியும், இந்தியாவிற்கே எடுத்துக்காட்டான ஆட்சியாக நடைபெற்று வரும் தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டா லின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்தின் திரா விட மாடல் ஆட்சியின் சாத னைகளை விளக்கியும், மூடப் பழக்கங்களை ஒழிக்கின்ற வகை யில் பத்தி வந்தால் புத்தி போகும், புத்தி வந்தால் பக்தி போகும் என்ற தந்தை பெரியாரின் கொள் கையை விளக்கியும் நகைச்சுவை  கலந்த சிந்திக்ககூடிய கருத்துக் களை எடுத்துக் கூறி சிறப்புரை யாற்றினார்.

பொதுக்கூட்டத்தின் தொடக் கத்தில் முக்கரை க.சுடர்வேந்தன் மூடநம்பிக்கைகளை முறியடிக் கின்ற வகையில் மந்திரமா? தந்திரமா? எனும் அறிவியல் நிகழ்ச்சியினை நடத்தி விளக்க மளித்தார். உரத்தநாடு நகர செய லாளர் ரெ.ரஞ்சித்குமார் அனை வரையும் வரவேற்று உரையாற் றினார். மாநில வீரவிளையாட்டு கழக செயலாளர் நா.இராம கிருஷ்ணன் இந்நிகழ்வை ஒருங் கிணைத்தார்.

திராவிடர் கழக மாநில ஒருங் கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், பெரியார் பெருந்தொண்டர் தோ.தம்பிக் கண்ணு, மாவட்ட துணை செயலாளர் அ.உத்திராபதி, மாவட்ட வழக்குரைஞரணி செயலாளர் க.மாரிமுத்து, 

தஞ்சை தெற்கு ஒன்றிய செய லாளர் நெல்லுப்பட்டு 

அ.இராம லிங்கம், ஒன்றிய ப.க. தலைவர் கு.நேரு, ஒன்றிய விவசாயணி தலைவர் மா.மதி யழகன், உரத்தநாடு ஒன் றிய கிழக்குப் பகுதி செயலாளர் துரை.தன்மானம், தஞ்சை மாநகர துணை செயலாளர் இரா.இளவரசன், உரத்தநாடு நகர துணைச் செயலாளர் இரா.இராவணன், நகர இளை ஞரணி துணை செயலாளர் க.மாதவன், ஒக்கநாடு தோழர் கள் வீரத்தமிழன், சக்தி, ராஜீவ் காந்தி, விஜய், பொறியாளர் பாலகிருஷ்ணன், மண்டலக் கோட்டை சுரேந்திரன், நெடுவை கு.லெனின், பெரியார் நகர் சக்தி வேல், வெள்ளூர் மெய்யழகன், வன்னிப்பட்டு செந்தில், காங் கிரஸ் கட்சி பொறுப்பாளர் கக்கரை மனோகரன், திமுக தோழர்கள் சிட்டிபாபு, ஜெய ராமன், ஊரச்சி நடராஜன், ஒக்க நாடு ஒன்றிய குழு உறுப்பினர் துரைராசு, அய்யப்பன், வார்டு செயலாளர் சரவணன், கொத்த னார் கருப்பையன் மற்றும் கழ கப் பொறுப்பாளர்கள், தோழர் கள் கலந்துகொண்டனர்.

சைவமடத் தெருவில் வசிக் கும் தெருவாசிகள் தங்கள் வீடுக ளின் முன்புறம், மாடிகள் போன்ற இடங்களில் தாய்மார் கள் தங்கள் குழந்தைகளுடன் அமர்ந்து பொதுக்கூட்ட பிரச் சாரத்தைக் கேட்டு மகிழ்ந்தனர்.

கழகத்தில் இணைந்த தோழர்கள்

இந்நிகழ்வின் முத்தாய்ப்பாக உரத்தநாடு அண்ணாசிலை அருகில் தேநீர் கடை நடத்தி வரும் தோழர் சசிக்குமார், அவரது மகள் பவித்ரா (பெரி யார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் முதலாம் ஆண்டு இளங்கலை கணினி அறிவியல் துறை மாணவர்) ஆகியோர் கழக ஒருங்கிணைப்பாளர்கள் தஞ்சை இரா.ஜெயக்குமார், உரத்தநாடு இரா.குணசேகரன் ஆகியோர் முன்னிலையில் தங்களை திராவிடர் கழகத்தில் இணைத்துக்கொண்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *