வாரணாசி மற்றும் மதுரா கோயில்கள் தொடர்பான சர்ச்சை, வக்ஃப் (திருத்த) மசோதா, மத மாற்றம் மற்றும் பிற விவகாரங்கள் குறித்து விஷ்வ ஹிந்து பரிஷத் ஏற்பாடு செய்த ஓய்வுபெற்ற நீதிபதிகளின் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
விஷ்வ ஹிந்து பரிஷத்தின் (விஎச்பி) சட்டப் பிரிவால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தக் கூட்டத்தில், உச்சநீதிமன்றம் மற்றும் பல்வேறு உயர்நீதிமன்றங்களின் குறைந்தது 30 ஓய்வு பெற்ற நீதிபதிகள் கலந்து கொண் டனர். ஒன்றிய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வாலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ‘‘விஷ்வ ஹிந்து பரிஷத்தின் சட்டப் பிரிவால் ஏற்பாடு செய்யப்பட்ட நீதிபதிகளின் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று, வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கான நீதித்துறை சீர்திருத்தங்கள் தொடர்பான தலைப்புகளில் விரிவான விவாதம் நடத்தினேன்,” என்று மேக்வால் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அவர் எக்ஸில் நிகழ்ச்சியின் படங்களையும் பதிவிட்டு, “இந்த சந்தர்ப்பத்தில், ஓய்வுபெற்ற நீதிபதிகள், பிற சட்ட வல்லுநர்கள், மூத்த வழக்குரைஞர்கள் மற்றும் பிற புகழ்பெற்ற அறிவுஜீவிகள் விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவர் அலோக் குமாரின் மகத்தான முன்னிலையில் கலந்து கொண்டனர்,” என்று கூறியுள்ளார்.
வாரணாசி மற்றும் மதுரா கோயில்கள் தொடர்பான சர்ச்சைகள், வக்ஃப் (திருத்த) மசோதா, பசு வதை மற்றும் மத மாற்றம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதித்த விஎச்பியின் சட்டப் பிரிவால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டம் இது என்று ஆதாரங்கள் தெரிவித்தன.
ஓய்வு பெற்ற நீதிபதிகள் சங்பரிவார் அமைப்பான விஸ்வ ஹிந்து பரிஷத் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று, காவிகளின் கருத்துக்களோடு இணைந்து ஆலோசனைகளைக் கூறுகின்றனர் என்றால், இவர்கள் எல்லாம் நீதிபதிகளாக இருந்த போது, அவர்களுடைய நீதித் தராசு சாயாமல்
இருந்திருக்கும் என்று கருத முடியுமா?
நீதித்துறை வரை காவிகளின் ஊடுருவல் வலுவாக நங்கூரம் பாய்ச்சி இருக்கிறது என்பது
வெள்ளிடைமலையாகத் தெரிய வில்லையா?
இப்பொழுதே கூட பணியில் இருக்கும் நீதிபதிகள் சாயும் தாரசாக இருப்பதைப் பார்க்க முடிகிறதே!
பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பு சொன்ன உச்சநீதிமன்ற நீதிபதிகள், ஓய்வுக்குப் பிறகு பல முக்கியமான உயர் பதவி சிம்மாசனங்களில் வீற்றிருப்பதைக் காண முடிகிறதே!
‘சுதந்திரம்’ அடைந்த இந்தியாவில் ‘டெமாக்கிரசி’ இருக்காது – ‘பிராமி னோகிரசி தான் இருக்கும் என்று 1925இல் தந்தை பெரியார் எச்சரித்ததன் அருமை இப்பொழுது புரிகிறதே!