ஓய்வு : அரசு ஊழியா்களின் பணிக்கொடை உச்சவரம்பு ரூ.25 லட்சமாக அதிகரிப்பு

1 Min Read

சென்னை, செப்.13 அரசுப் பணிகளிலிருந்து ஓய்வு பெற்ற மற்றும் மறைந்த ஊழியா்களுக்கு பணிக் கொடையின் உச்சவரம்பு ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை நிதித் துறை முதன்மைச் செயலா் த.உதயச்சந்திரன் வெளியிட்டுள்ளார். அவரது உத்தரவு விவரம்:
ஏழாவது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகள்படி, ஓய்வு பெறும் மற்றும் மறைந்த ஊழியா்களுக்கு பணிக் கொடையின் அளவை 25 சதவீதம் அதிகரிக்க ஒன்றிய அரசு உத்தரவிட்டிருந்தது. அதாவது, பணிக் கொடையின் உச்சவரம்பை ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயா்த்தி உத்தரவிட்டது. இதே முடிவை தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொண்டு, ஓய்வு பெறும் மற்றும் மறைந்த தமிழ்நாடு அரசு ஊழியா்களுக்கும் கடந்த ஜனவரி 1-ஆம் தேதியில் இருந்து முன்தேதியிட்டு அமல்படுத்த முடிவு செய் துள்ளது. அதன்படி, பணிக் கொடையின் உச்ச வரம்பு அளவு ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயா்த்தப்படுகிறது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *