ஓய்வு : அரசு ஊழியா்களின் பணிக்கொடை உச்சவரம்பு ரூ.25 லட்சமாக அதிகரிப்பு

Viduthalai
1 Min Read

சென்னை, செப்.13 அரசுப் பணிகளிலிருந்து ஓய்வு பெற்ற மற்றும் மறைந்த ஊழியா்களுக்கு பணிக் கொடையின் உச்சவரம்பு ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை நிதித் துறை முதன்மைச் செயலா் த.உதயச்சந்திரன் வெளியிட்டுள்ளார். அவரது உத்தரவு விவரம்:
ஏழாவது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகள்படி, ஓய்வு பெறும் மற்றும் மறைந்த ஊழியா்களுக்கு பணிக் கொடையின் அளவை 25 சதவீதம் அதிகரிக்க ஒன்றிய அரசு உத்தரவிட்டிருந்தது. அதாவது, பணிக் கொடையின் உச்சவரம்பை ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயா்த்தி உத்தரவிட்டது. இதே முடிவை தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொண்டு, ஓய்வு பெறும் மற்றும் மறைந்த தமிழ்நாடு அரசு ஊழியா்களுக்கும் கடந்த ஜனவரி 1-ஆம் தேதியில் இருந்து முன்தேதியிட்டு அமல்படுத்த முடிவு செய் துள்ளது. அதன்படி, பணிக் கொடையின் உச்ச வரம்பு அளவு ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயா்த்தப்படுகிறது.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *