கரூர் தாந்தோணி ஒன்றிய அலுவலகத்தில் புதிய விநாயகர் கோயில் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வந்த நிலையில் அரசு அலுவலகத்தில் கோயில் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திராவிடர் கழகம் மற்றும் பொது அமைப்புகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதன்படி கோயில் இடித்து அகற்றப்பட்டது.
கரூர் மாவட்டம் தாந்தோணி ஒன்றிய அரசு அலுவலகம் வளாகத்தில் புதிய விநாயகர் கோயில் கட்டுவதற்கான பணிகள் நடைபெறுவதை எதிர்த்து திராவிடர் கழகம் மற்றும் சமூக ஆர்வலர்கள், பொதுநல அமைப்புகள் கரூர் தாந்தோணி ஒன்றிய அரசு அலுவலகத்தில் தாந்தோணி ஒன்றிய பெருந்தலைவரிடம் கோயில் கட்டக் கூடாது என்று அரசு விதிமுறைகளின் படி அரசாணை உள்ளதால் கட்டுமானப் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும்’’ என்று மனு அளிக்கப்பட்டது. பிடிஓ , கரூர் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் மனு அளிக்கப்பட்டது. ‘‘தாந்தோணி ஒன்றிய பெருந்தலைவராக இருக்கும் சிவகாமி வேலுச்சாமி உடனடியாக கோயில் கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும், இல்லையென்றால் திராவிடர் கழகம் மற்றும் ஒத்த கருத்துடைய அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்’’ என்று தெரிவிக்கப்பட்டது.
இரவோடு இரவாக இடித்துத் தரை மட்டம்
திராவிடர் கழகம் எடுத்த முயற்சிக்குப் பலன்
கரூர் தாந்தோணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதிதாக கட்டப்பட்ட விநாயகர் கோயில் திராவிடர் கழகம் மற்றும் ஒத்த கருத்து உடைய இயக்கங்களின் மூலம் மாவட்ட ஆட்சியர், ஒன்றிய பெருந்தலைவர் பிடிஓ ஆகியோருக்கு அனுப்பப்பட்ட கோரிக்கையின் மனு எதிரொலியாக இரவோடு இரவாக கோயில் இடித்துத் தரை மட்டமானது. திராவிடர் கழகம் எடுத்த முயற்சிக்கு தக்க பலன் கிடைத்துள்ளது.