பெரியார் பன்னாட்டமைப்பின் தலைவரும் அமெரிக்காவில் புகழ்பெற்ற மருத்துவரும் சமூகநீதி ஆர்வலருமான சோம. இளங்கோவன் அவர்கள், “அமெரிக்காவில் அய்ம்பது ஆண்டுகள் – ஒரு பகுத்தறிவுவாதியின் பயணம்” என்ற தன்னுடைய நூலை மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வழங்கினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை வரவேற்று மருத்துவர் சோம.இளங்கோவன் கவிதை வருமாறு:–
மாணவராய்த் துடிப்பு
இளைஞராய்ப் படிப்பு
உழைப்பால் உயர்ந்தே
முதல்வராய் இருக்கை!
செறிவானத் திட்டங்கள்
சிறப்பாக நிறைவேற்றித்
தமிழரின் பொற்காலம்
தரணியே போற்றுதே!
திராவிட மாடலே
உலகை வெல்லுமே!
1971–ல் முத்தமிழ் அறிஞர்
2024–ல் முத்துவேலரின் பேரர்
கலைஞரின் வார்ப்பு
தமிழரின் தளபதி!
பெரியார் பன்னாட்டின்
வீரமணி விருதை
வழங்கியே மகிழ்ந்தோம்!
வருக சிகாகோ
வந்து பாருங்கள்
கொடிகட்டிப் பறக்கின்றோம்
நெஞ்சமெல்லாம் தமிழ்தான்!
வருக! வருகவே! வாழ்க வாழ்கவே!
மருத்துவர் சோம.இளங்கோவன்
பெரியார் பன்னாட்டமைப்பு
அமெரிக்கா