விநாயகர் ஊர்வலம் இளைஞர் பலி

1 Min Read

ராயபுரம், செப்-13– சென்னை காசிமேடு சிங்காரவேலன் நகர் 1ஆவது தெருவைச் சேர்ந்தவர் பிரேம்குமார் (வயது 30), மீனவர். கடந்த 9.9.2024 அன்று அந்தப் பகுதியில் வழிபாட்டுக்கு வைத்திருந்த விநாயகர் சிலையை காசிமேடு கடலில் கரைப்பதற்காக சரக்கு வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். அந்த வாகனத்தில் மீனவர் பிரேம்குமாரும் சென்றார்.

ராயபுரத்தில் இருந்து காசிமேடு வழியாக சென்றபோது, எஸ்.ஓ. பேருந்து நிலையம் அருகே சரக்கு வாகனத்தின் ஓட்டுநர் திடீரென வண்டியை நிறுத்தியபோது நிலைதடுமாறிய பிரேம்குமார், சரக்கு வாகனத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி 11.9.2024 அன்று இரவு பிரேம்குமார் மூளைச்சாவு அடைந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவரது உடல் உறுப்புகளை கொடையாக வழங்குவதாக உறவினர்கள் தெரிவித்தனர். அதன்படி அவரது உடல் உறுப்புகள் கொடையாக பெறப்பட்டது. பிரேம்குமார் உடலுக்கு ராயபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அய்ட்ரீம் மூர்த்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த சம்பவம் தொடர்பாக ராயபுரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *