ஈரோடு பெரியார் படிப்பக வாசகர் வட்ட சிறப்புக்கூட்டம் – திராவிடத்தால் வாழ்கிறோம்.

Viduthalai
1 Min Read

ஈரோடு, செப். 13- 12.09.24 வியாழன் 6 மணியளவில் ஈரோடு பெரியார் மன்றத்தில் பெரியார் படிப்பக வாசகர் வட்டம் சார்பில் கூட்டம் தலைவர் கனிமொழி நடராஜன் தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் தி.மு.க செய்தி தொடர்பு மாநில இணைச்செயலாளர் தமிழன் பிரசன்னா – திராவிடத்தால் வாழ்கிறோம் – என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். முன்னதாக பெரியார் படிப்பக வாசகர் வட்டசெயலாளர் கவுதாநந்தகோபால்வரவேற்புரையாற்றினார். தி.மு.க ஒன்றிய செயலாளர் ப. செங்கோட்டையன் வாழ்த்துரை வழங்கினார்.கூட்டத்தில்,மாநகர்துணை மேயர் வி.செல்வராஜ் ,மாவட்ட பொருளாளர் பி கே பழனிச்சாமி, மண்டல தலைவர்கள் அக்னி சந்துரு,குறிஞ்சி தண்டபாணி,செல்லப்பொன்னி மனோகரன் கவுன்சிலர், வீ.சி நடராஜன்,கோட்டை ராமச்சந்திரன்,மாநில திமுக வழக்குரைஞரணி

இணைச்செயலாளர் மா.சு ராதாகிருஷ்ணன்,. தலைமை கழக அமைப்பாளர் ஈரோடு சண்முகம், மாவட்ட தலைவர் இரா நற்குணன், பேராசிரியர் ப. காளிமுத்து கோ திருநாவுக்கரசு, தே.காமராஜ்,பவானி அசோக்குமார்மற்றும் திரளான மகளிர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.பெரியார் படிப்பக வாசகர் வட்ட தலைவர் கனிமொழி நடராஜ் “முரசொலி, விடுதலை படித்து வாரவாரம் அதில் கேள்வி கேட்கப்பட்டு மூன்று மகளிர் தேர்தெடுக்கப்பட்டு பரிசு வழங்கப்படும்” என்று அறிவித்தார். சிறப்பு விருந்தனர்களுக்கு தந்தை பெரியார் படமும், புத்தகமும் வழங்கப்பட்டது இறுதியாக பொருளாளர் ஆனந்த லட்சுமி நன்றி கூற கூட்டம் நிறைவடைந்தது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *