தந்தை பெரியார், அறிஞர் அண்ணா பிறந்த நாள்களை முன்னிட்டு 4 நாள்கள் பயணமாக இன்று (13.09.2024) காலை ஜப்பான் சென்று சேர்ந்தார் திராவிடர் கழகத் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்! ஜப்பான் நரிட்டா விமான நிலையத்தில், ஜப்பான்வாழ் தமிழ் இந்தியர்கள் சங்கம் சார்பில், வி.குன்றாளன், ச.கமலக்கண்ணன், ரா. செந்தில்குமார், கு.பிரதிக் ஆகியோர் நூல்கள் மற்றும் பூங்கொத்துக் கொடுத்து வரவேற்றனர். துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், தகவல் தொழில் நுட்பக்குழு மாநில ஒருங்கிணைப்பாளர் வி.சி.வில்வம் ஆகியோர் உடன் இருந்தனர்.