பூமிக்கு மிக அருகில் வருகிற 2029ஆம் ஆண்டு ஏப்ரல் 13ஆம் தேதி வரும் ‘அபோபிஸ்’சிறுகோளை இஸ்ரோ தீவிரமாக கண் காணித்து வருகிறது.
விண்வெளியில் ‘அபோ பிஸ்’ என்ற சிறுகோள் கடந்த 2004ஆம் ஆண்டு கண்டு பிடிக்கப்பட்டது. இந்தியாவின் மிகப் பெரிய விமானம் தாங்கிக் கப்பலான அய்.என்.எஸ்.விக்ரமாதித்யா மற்றும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தை விட பெரியது. இந்த சிறுகோள் சுமார் 340 முதல் 450 மீட்டர் விட்டம் கொண்டதாக இருக்கலாம் என்று மதிப்பி டப்பட்டு உள்ளது.
பூமியிலிருந்து 32 ஆயிரம் கிலோமீட்டர் உயரத்தில் உள்ள இந்த சிறுகோள் பூமியை நோக்கி வேகமாக வந்து கொண்டிருப்பதாக தெரிய வந்துள்ளது.
இந்த அளவுக்கு வேறு எந்த சிறுகோளும் பூமிக்கு அருகில் வந்ததில்லை. பொதுவாக 140 மீட்டர் விட்டம் கொண்ட எந்த ஒரு சிறுகோள் போன்ற பொருட்கள் பூமிக்கு அருகில் வந்தால், அது அபாயகரமான தாக கருதப்படுகிறது. மிக மோசமான சூழ்நிலையில் ‘கண்ட அளவிலான பேரழிவை’ ஏற்படுத்தும் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) (இஸ்ரோ) மதிப்பீடு மதிப் செய்துள் ளது.
பூமியை நோக்கி வரும்
இந்த நிலையில் வருகிற 2029ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13ஆம் தேதி பூமிக்கு மிக அருகில் அபோபிஸ் வரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. பொது வாகபூமிக்கு தொடர்பற்ற பிற கோள்கள் போன்றபொருட்களிலிருந்து பூமியைப் பாதுகாப் பதற்காக, கண்காணிப்பு மற்றும் பகுப்பாய்வுக்கான கருவி கள் (நேத்ரா) மூலம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ)’அபோபிஸை’ மிக நெருக்கமாகக் கண் காணித்து வருகிறது.
பூமிமீது சிறுகோள் தாக்கம் குறித்து கவலைகள் இருந்தாலும், சில ஆய்வுகள் 2029ஆம் ஆண்டு ‘அபோபிஸ்’ சிறு கோள்
பூமியை தாக்காமல் செல்லவாய்ப்பு உள்ளது என் றும் கூறப்படுகிறது.
விண்வெளிப் பொருள்கள் கண்காணிப்பு மற்றும் பகுப் பாய்விற்கான இஸ்ரோவின் நெட்வொர்க்கின் (நேத்ரா) தலைவர் ஏ.கே.அனில்குமார் கூறும்போது, ‘சிறுகோள்கள் மோதுவதால் ‘உலகளாவிய இடையூறு’ ஏற்படலாம் என்றார்.
சிறுகோள் தாக்கி டைனோசர்கள் பலி
பூமியை அச்சுறுத்தும் முதல் சிறுகோள் அபோபிஸ் அல்ல. இதற்கு முன்பும் பல நிகழ்வுகள் நடந்துள்ளன. குறிப்பாக ரசியாவின் ஒப்லாஸ்டில் என்ற இடத்தில் 20 மீட்டர் விட்டம்கொண்டசிறுகோள் ஒன்று கடந்த 2013ஆம் ஆண்டு பிப்ரவரி 5ஆம் தேதி மோதியது. இதனால் சுமார் 1,500 பேர் காயமடைந்தனர் மற்றும் 7 ஆயிரத்து 200 கட்டடங்கள் சேதமடைந்தன. அதேபோல், 1908ஆம் ஆண்டில், ரசியாவில் துங்குஸ்காவில் 30 மீட்டர் விட்டம்கொண்டசிறுகோள் மோதியது. இதில் 80 மில்லியன் மரங்கள் அழிந்தன.
அதேபோல், மெக்சிகோவை பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு 10-15 கிலோ மீட்டர் விட்டம்கொண்டசிறுகோள் தாக்கியதில், டைனோசர்கள் மற்றும் பூமியில் இருந்த ஏறத் தாழ 70 சதவீத உயிரினங்கள் அழிந்துள்ளது என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.