Viduthalai Daily NewspaperViduthalai Daily NewspaperViduthalai Daily Newspaper
Notification Show More
Font ResizerAa
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Reading: மாநகராட்சி பணியாளர்கள் 11 ஆயிரத்து 931 பேருக்கு உடல் பரிசோதனை முகாம்
Share
Font ResizerAa
Viduthalai Daily NewspaperViduthalai Daily Newspaper
Search
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Follow US
தமிழ்நாடு

மாநகராட்சி பணியாளர்கள் 11 ஆயிரத்து 931 பேருக்கு உடல் பரிசோதனை முகாம்

Last updated: September 12, 2024 3:25 pm
Published September 12, 2024
தமிழ்நாடு
SHARE

சென்னை, செப்.12 சென்னையில் 11,931 மாநகராட்சி பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை முகாமை மேயர் ஆர்.பிரியா தொடங்கி வைத்தார். சென்னை மாநகராட்சியின் 2024-2025-ஆம் நிதிநிலை அறிவிப்பில், மாநகராட்சிக்கு உட்பட்ட தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அனைத்து நிலை பணியாளர்களுக்கும் முழு உடல் பரிசோதனை மாநகராட்சி சார்பாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதையொட்டி சென்னை மாநகராட்சி பணியாளர்களுக்கான முழு உடல் பரிசோதனைமுகாம், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நடைபெற்றது.
மாநகராட்சி மேயர் பிரியா தொடங்கிவைத்து முகாமை பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மாநகராட்சியின் 4,571 நிரந்தரப் பணியாளர்கள், 7,360 தற்காலிகப் பணியாளர்கள் என மொத்தம் 11,931 பேருக்கு முதல்கட்டமாக முழு உடல் பரிசோதனை முகாம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இதில் மொத்தமாக 16 வகையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. அதன்படி முழு சிறுநீர் பகுப்பாய்வு, ரத்த பரிசோதனை, ரத்த சர்க்கரை, கொழுப்பு பரிசோதனை, கல்லீரல் செயல்பாடு, இசிஜி, டிஜிட்டல் எக்ஸ்ரே, கண் காது பிரச்சினைகள் குறித்த பரிசோதனைகள், பெண்களுக்கு கர்ப்பப்பை புற்றுநோய் பரிசோதனைகள் ஆகியவை மேற்கொள்ளப்படுகின்றன.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பணியாளர்களுக்கும் அடுத்த 3 மாதங்களுக்கு இந்த பரிசோதனைகள் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரிமருத்துவமனை, கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு மருத்துவமனை, அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில் நடைபெறும். மேலும் மாநகராட்சி பணியாளர்களில் உயர் ரத்தஅழுத்தம், சர்க்கரை நோய்க்கு மக்களைத் தேடி மருத்துவம் மூலம்தொடர்ந்து மருந்துகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

Also read

தமிழ்நாடு
திருச்சியில் பஞ்சப்பூர் பகுதியில் கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கத்தை விட பெரிய பேருந்து நிலையம் நாளை திறப்பு
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.37 ஆயிரம் கோடி வங்கிக் கடன் வழங்க இலக்கு! துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்

மாநகராட்சியில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்கும் முழு உடல் பரிசோதனை மேற்கொள்ள கட்டணமாக ஒரு நபருக்குரூ.1000 என நிர்ணயிக்கப்பட்டு, முதல்கட்டமாக 11,931 பணியாளர்களுக்கு ரூ.1.19 கோடி மாநகராட்சி மூலம் மருத்துவமனைகளுக்கு செலுத்தப்பட்டுள்ளது. பணியாளர்களுக்கு கூடுதல் சிகிச்சைகள் தேவைப் பட்டால், அரசு திட்டத்துடன் இணைந்து சிகிச்சை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

சாவிலும் 5 பேருக்கு வாழ்க்கை..
உடல் உறுப்புக் கொடை செய்த
ஈரோடு மனிதநேய விவசாயி..!

கோவை, செப்.12 ஈரோட்டில் மூளைச் சாவடைந்த விவசாயியின் உடல் உறுப்புகள் கொடை செய்யப்பட்டதையடுத்து 5 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர். உடல் உறுப்புக் கொடை அளிக்க முன்வந்த அவரது குடும்பத்தினருக்கு மருத்துவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். அதேபோல, உடல் உறுப்புக் கொடை குறித்து பொதுமக்களிடையே அதிக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உடல் உறுப்புக் கொடை செய்பவர்களை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாட்டில் உடல் உறுப்புகள் கொடை செய்வோருக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் தற்போதைய நிலவரத்தின்படி சிறுநீரகம், கல்லீரல், இதயம் என பல்வேறு உடல் உறுப்புகள் தேவைப்படுவதாக 7,815 பேர் பதிவு செய்து காத்திருக்கின்றனர்.

உடல் உறுப்புகள் கொடை திட்டம் தொடங்கப்பட்ட நாளில் இருந்து இதுவரை மூளைச் சாவடைந்த 250 பேரிடம் இருந்து 1,330 உடல் உறுப்புகள் கொடையாகப் பெறப்பட்டு நோயாளிகளுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஈரோடு மாவட்டம், நம்பியூர், பொலவபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பழனிசாமி, ஜேஸ்வரி இணையர். இவர்களது மகன் அய்ங்கரன் வயது 47. இவருக்கு கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி ரத்த அழுத்தம் அதிகமாகி மூளையில் இரத்த கசிவு ஏற்பட்டு சுயநினைவை இழந்தார். இதையடுத்து, கோவை கே.எம்.சி.எச் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலை யில், கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி அய்ங்கரனுக்கு மூளைச்சாவு ஏற்பட்டது . அதனைத் தொடர்ந்து, அவரது பெற்றோர் தங்களது மகன் அய்ங்கரனின் உடல் உறுப்புகளை கொடையளிக்க முன்வந்தனர்.

இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு உறுப்பு கொடை ஆணையத்தின் அனுமதியுடன் அவரது சிறுநீரகங்கள், கண்கள் மற்றும் தோல் ஆகியவை கொடையாக பெறப்பட்டன. அய்ங்கரனின் சிறுநீரகங்கள் கே.எம்.சி.எச். மருத்துவமனைக்கும், கண்கள் மற்றும் தோல் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டன. கே.எம்.சி.எச் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் அய்ங்கரனின் உறுப்புகளை மற்ற நோயாளிகளுக்குப் பொருத்தும் வகையில் உரிய நேரத்தில் திறம்பட செயல்பட்டு உடல் உறுப்புகளை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Ad imageAd image

You Might Also Like

ஓடிச்சென்று பேருந்தை பிடித்து தேர்வெழுதிய மாணவிபடைத்த சாதனை

உலக புத்தக நாளில் விற்பனை

பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் ராணுவத்துடன் தமிழ்நாடு நிற்கிறது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலைதள பதிவு

கோவில் பிரசாதத்தில் பாம்பு! பகவான் திருவிளையாடலோ?

தமிழ்நாட்டில் மின் உற்பத்தி திறன் 3,267 மெகாவாட் அதிகரிப்பு

TAGGED:பழனிசாமி
Share
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Ad imageAd image
- Advertisement -
Ad imageAd image

நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகள்

About US

"Viduthalai" is a Tamil newspaper founded by the social reformer Thanthai Periyar, in 1935. Aimed at promoting rationalism, social justice, and gender equality, it played a crucial role in advocating for the rights of marginalized communities in Tamil Nadu. The newspaper remains significant in the legacy of Periyar’s movement for a more equitable society. Under the able leadership of K. Veeramani, the current editor of "Viduthalai," the newspaper continues to uphold the values of Periyar's vision for social justice and equality. Veeramani, a prominent activist and advocate for rationalism, has revitalized the publication, ensuring it addresses contemporary issues while staying true to its foundational principles.
Quick Link
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Other Links
  • Print Subscription
  • Privacy Policy
  • Contact
Our Other Publications
  • Unmai Magazine
  • The Modern Rationalist
  • Periyar Pinju Children’s Magazine
  • Dravidian Book House
© Viduthalai. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?