வேலூர் செப். 12- ஆவி னில் புதிய பொருட்கள் அறிமுகப் படுத்தப்படும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.
வேலூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங் கும் விழா மற்றும் பால் உற்பத்தி யாளர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
பால் உற்பத்தி மற்றும் பால் பண்ணை மேம்பாட்டு துறை இயக்குநர் வினீத் தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சியர் வே. இரா.சுப்புலெட்சுமி முன்னிலை வைத்தார்.
ஆவின் பொது மேலாளர் இளங்கோவன் வரவேற்றுப் பேசினார். பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்துகொண்டு 126 பயனாளி களுக்கு ரூ. 82 லட்சத்து 33 ஆயிரம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதா வது:-ஒரு கிராமத்தின் பொருளா தாரத்தை நிர்ணயிப்பது பால் வளத்துறை தான். பாலின் வருமானத்தை வைத்துத்தான் விவசாயிகள் சிறு தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும்.
கடந்த ஆண்டு 26 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த ஆண்டு 38 லட்சம் லிட்டர் பால் கொள் முதல் செய்யப்படுகிறது. இத்துறையின் மூலம் கிராமங்கள் வளர்ச்சி பெறுகிறது.
வேலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 90 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த ஆண்டு ஒரு லட்சத்து 20 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. பால் வழங்கும் விவசாயிகளுக்கு ஊக்கத் துறையாக ரூ.3 வழங்கப்படுகிறது. இதுவே மைல்கல்தான்.
தரமான பாலை வழங்கும் விவசாயிகளுக்கு கூடுதலாக ஒரு ரூபாய்வழங்கப்படுகிறது.
ஆவினில்புதிய பொருட்கள் அறிமுகம் செய்ய உள்ளோம். விவசாயிகளுக்கு போனஸ் வழங்கப்பட உள்ளது. தீவனத் திற்கு ஒன்றிய அரசு மானியத்தை நிறுத்தி உள்ளதால் தீவனத்தை கூடுதலாக புரதச்சத்தினை கூட்டி தருகிறோம் தன்னிறைவு பெறுவது தான் அரசின் குறிக்கோளாக உள்ளது. அனைவரும் ஒன்றி ணைந்து செயல்பட்டால் வாழ்க்கை தரம் உயரும்.
-இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் அவர் பால் உற்பத்தியாளர்களுடன் கலந்துரையாடினார். நிகழ்ச்சியில் மாவட்ட கழக செயலாளர் ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ, மாநகர செயலாளர் ப.கார்த்திகே யன் எம்.எல். ஏ இராணிப்பேட்டை மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஜெ.எல்.ஈஸ்வரப்பன் எம்எல்ஏ, மாவட்ட ஊராட்சி குழு தலைவர்மு.பாபு, மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.