இணையவழி விளையாட்டுகள் மாணவர்களின் வளர்ச்சியை பாதிக்கும் தமிழ்நாடு தலைமைச் செயலாளர் எச்சரிக்கை

viduthalai
3 Min Read

சென்னை, செப்.12- சென்னை, சாந்தோம் அருகில் உள்ள நகராட்சி நிர்வாக இயக்குநரகக் கூட்ட அரங்கில் தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம் சார்பில் இணையவழி (ஆன்லைன்) விளையாட்டுகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ‘இணையவழி விளையாட்டிற்கு அடிமையாதலும், மாணவர்களுக்கான எதிர்வினைகளும்’ எனும் தலைப்பில் விழிப்புணர்வு முகாமை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் தொடங்கி வைத்தார்.
மேலும், இணையவழி விளை யாட்டுகள் மூலம் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பான விழிப்புணர்வு காட்சிப்பதிவு ஒன்றையும் வெளியிட்டார்.

அதன் பிறகு விழா மேடையில் பேசிய தலைமைச் செயலாளர் முருகானந்தம்,
“தமிழ்நாட்டை பொறுத்தவரையில் அனைத்துத் துறையிலும் வளர்ச்சி பெற்று இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. இணையதள விளையாட்டின் தீமைகளை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு 2022-இல் இதற்கான சட்டத்தை இந்தியாவிலே முதன்முறையாக கொண்டு வந்து சாதனை படைத்தது. முடிந்த வரை குழந்தைகளிடம் அலைபேசிகளை கையில் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி தற்போதைய அரசு மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் பெரும் பங்களிப்பை அளித்து வருகிறது. விளையாட்டை ஊக்குவிப்பதற்காக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு செயல் திட்டங்களை இளைஞர்களுக்கு மேற்கொண்டு வருகிறார்.

இணையம், கணினி, திறன்பேசி போன்ற புதிய தொழில்நுட்பங்களின் வளர்ச்சிக்கு இன்றியமையாததாக இருக்கின்றது. இணையதள விளையாட்டு (ஆன்லைன் கேமிங்) பொழுதுபோக்குக்காக பயன்படுத்தப் படுவது நாளுக்கு நாள் அதிகரித்திருக்கிறது. காலப்போக்கில் இன்னும் அதிகரிக்கும்.

தொழில்நுட்பம், ஆக்கப் பூர்வ வழி மற்றும் தீயவழி என இருபுறமும் கூரான வாளாக உள்ளது. இணைய வழி சாத னங்களை பொழுதுபோக்கிற் காக பயன்படுத்துவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இணையவழி சூதாட்ட விளை யாட்டுகளின் தீமை களை தடுக் கும் வகையில், ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடை சட்டத்தை நாட்டிலேயே தமிழ்நாடு அரசுதான் முதன் முதலில் நிறைவேற்றியது.

மாணவர்களின் வளர்ச்சியை பாதிக்கிறது

இணைய வழி விளையாட்டுகளின் மீதான மோகமும். அடிமைத்தனமும் மிக அதிகளவில் மாணவர்கள் மத்தி யில் ஏற்பட்டுள்ளது. என் மகனுக்கு அலைபேசி கொடுத்தது கிடை யாது. ஆனால் கரோனா சமயத்தில் இணைய வழி வகுப்பு என்று சொன்னதால் வேறு வழியில்லாமல் வழங்க வேண் டியதாகிவிட்டது. 5 சதவீத பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் இணைய வழி விளையாட்டு கள் அடிமைத்தனத்தை உரு வாக்கி இருக்கிறது என்று ஓர் ஆய்வு அறிக்கை சொல்கிறது. மாணவர்களின் மனம், உடல் வளர்ச்சியை இணைய வழி விளையாட்டுகள் வெகுவாக பாதிக்கின்றன.

கண்ணை இமை காப்பது போல மாணவர்களையும் இளைஞர்களையும் இந்த அரசு காக்கிறது
சூதாட்ட விளையாட்டுகள் சமுதாயத்தில் எந்த மாதிரி தீமைகளை ஏற்படுத்துகின்றது என்பதை கருத் தில் கொண்டுதான் தமிழ்நாடு அரசு, இணையதள (ஆன்லைன்) விளை யாட்டை தடுக்கும் வகையில், 2022இல் சட்டத்தை இந்தியாவில் முதல் மாநிலமாக கொண்டு வந்தது.

இதனால் தான் பல அரசுகள் இணைய தள விளையாட்டை தடை செய்கின்றன. சீனா, ஜப்பானில் தடை செய்யப்பட்டுள்ளது. இன்று கூட ஆஸ்திரேலியாவில் 16 வயதிற்கு கீழ் உள்ள மாணவர்களுக்கு (ஆன்லைன் கேம்) தடை சட்டம் கொண்டு வருவதற்கு ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

கரோனா காலத்தில் தான் அலைபேசிகள் மாணவர்கள் கையில் அதிக அளவு சென்று சேர்ந்தது. இது குறித்து சரியான ஆய்வறிக்கைகள் இல்லை. எனினும், அலைபேசிகள் பள்ளி, கல்லூரி மாணவர்களை ஒரு அடிமையாக (addiction) மாற்றியுள்ளது.

ஆகவே, தமிழ்நாடு அரசு இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் நலனில் அக்கறை கொண்டுள்ளது. கண்ணை இமை காப்பது போல மாணவர்களையும் இளை ஞர்களையும் இந்த அரசு காக்கிறது. மாணவர்களும், இளைஞர்களும் தான் நம் எதிர்காலம்.

வெளியில் சென்று விளையாடு

மாணவர்களின் நடவடிக்கைளை கண்காணிப்பதில் பெற்றோர், ஆசிரியர்கள் கடமை முக்கியமானது. அவர்க ளுக்கு உடல் ரீதியான விளையாட்டுகள் மிகவும் முக்கியமானது. அவர்கள் வெளியில் சென்று விளையாடுவதை ஊக்குவித்து, சமூக ஊடக பயன்பாட்டில் இருந்து அவர்களை விலகியிருக்க செய்ய வேண் டும். முடிந்தவரை, மாணவர்களுக்கு அலைபேசிகளை கொடுக்காமல் இருப்பது நல்லது. இவ்வாறு அவர் பேசினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *