முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்குப் பெரியார் பன்னாட்டமைப்பு வாழ்த்து!

Viduthalai
1 Min Read

வாசிங்டன், செப்.12 அமெரிக்கா வந்து வெற்றி வாகை சூடிய மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் அமெரிக்கா கண்டிராத வரவேற்பை சிகாகோ விமான நிலையத்தில் கண்டார்.
பொங்கும் தமிழர் கூட்டம், இளைய தலைமுறை, மகளிர் என்று குடும்பங்களாகத் திரண்டு வந்து இதுவரை எந்தத் தலைவரும் இப்படியொரு வரவேற்பைப் பெற்றதில்லை.
300 குழந்தைகள் மேடையில் அன்பு மழை பொழிந்தனர்!
அவர்களில் பலரைத் தொட்டுத் தடவி அவர் மகிழ்வித்ததை அவர்கள் தங்கள் குழந்தைகட்குச் சொல்லி வரலாறு படைப்பார்கள்.

பல நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் செய்து பெரும் புரட்சியே செய்துள்ளார்.
உள்ளமெல்லாம் பொங்கி வழியும் மகிழ்ச்சியில் தமிழர்கள் திளைத்தனர்.
பெரியார் பன்னாட்டமைப்பின் சார்பில் நேரில் சென்று வாழ்த்தி மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.
“பெரியார், அண்ணா, கலைஞர் வழியில் நடக்கும் ‘திராவிட மாடல்’ ஆட்சி. இது ஒரு கட்சியின் ஆட்சி அல்ல. ஓர் இனத்தின்்ஆட்சி” என்று சொன்னார். மக்கள் விண்ணதிர ஆர்ப்பரித்தனர்.
தமிழரின் பொற்காலம் பொங்கி அனைவரும் வளம்பெற்று வாழ ‘திராவிட மாடல்’ ஆட்சி உலகிற்கு வழி காட்டும் என்று வாழ்த்துகின்றோம். வாழ்க பெரியார்! வளர்க ‘திராவிட மாடல்’ ஆட்சி!
இவ்வாறு சிகாகோ, பெரியார் பன்னாட்டமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரியார் பன்னாட்டு அமைப்பைச் சேர்ந்த தோழர்களும், ஆசிரியரின் மகள் அருள் செல்வியும் சென்றிருந்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *