பெரியார் பாலிடெக்னிக் என்.எஸ்.எஸ். மாணவர்கள் கலந்துகொண்ட விழிக்கொடை விழிப்புணர்வுப் பேரணி

viduthalai
1 Min Read

தஞ்சை, செப்.11- பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி யின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் தஞ்சாவூரில் நடை பெற்ற விழிக்கொடை விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டனர்.

மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் தஞ்சாவூர் மருத்து வக் கல்லூரி மற்றும் அரசு இராசா மிராசுதார் மருத்துவமனை இணைந்து நடத்திய விழிக்கொடை விழிப்புணர்வு பேரணி 6.09.2024 அன்று தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு தஞ்சை பழைய பேருந்து நிலையத்தை அடைந்தது.

விழிப்புணர்வுப் பேரணியில் வல்லம்இ பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஜி.செங்கொடி, நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்கள் 50 பேர் கலந்து கொண்டனர்.
விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப் பட்டன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *