அரியலூரில் பகுத்தறிவாளர் கழகம் நடத்திய பெரியார் பிறந்த நாள் பேச்சுப்போட்டி

1 Min Read

அரியலூர், செப்.11- அரியலூர் மாவட்ட ப.க.சார்பில்தந்தை பெரியார் பிறந்த நாள் விழா பேச்சுப்போட்டி அரியலூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான கல்லூரி மாணவர்கள் பங்கேற்று தந்தை பெரியாரைப் பற்றி சிறப்பாக உரையாற்றினார்கள். மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் தங்க.சிவமூர்த்தி, மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகன், மாவட்ட துணைத் தலைவர் இரா.திலீபன் மாவட்ட இணைச்செயலாளர் ரத்தின ராமச்சந்திரன், அரியலூர் ஒன்றிய தலைவர் சிவக்கொழுந்து உள்ளிட்டவர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து சிறப்பாக நடத்தினார்கள்.

வெற்றி பெற்றவர்கள்

முதல் பரிசு ரூ. 3000 இரா.கலைவாணன் பி.ஏ. தமிழ் மூன்றாம் ஆண்டு அரசு கலைக்கல்லூரி அரியலூர், இரண்டாம் பரிசு ரூ. 2000 பா.அரிகரன் இரண்டாம் ஆண்டு அரசு மருத்துவக் கல்லூரி அரியலூர், மூன்றாம் பரிசு ரூ 1000 அ.அஸ்வினி பி.ஏ. ஆங்கிலம் மூன்றாம் ஆண்டு மீனாட்சி ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி தத்தனூர் ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முதல் பரிசினை அரியலூர் கோல்டன் மருத்துவமனை பேரா. தங்கவேலு, இரண்டாம் பரிசினை பொறியாளர் குழுமூர் இராமச்சந்திரன், மூன்றாவது பரிசினை அரியலூர் பொதுக்குழு உறுப்பினர் இரா.கோவிந்தராஜன் ஆகியோர் வழங்கினர்.நிகழ்ச்சிக்கான இதர செலவினங்களை மாவட்டது. தலைவர் இரா.திலீபன் வழங்கினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *