கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

1 Min Read

11.9.2024
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்
இந்தியாவில் பிரதமர் மோடி பல ஆண்டுகள் கஷ்டப்பட்டு, நிறைய பணம் செலவழித்து, அரசு அமைப்புகளை தவறாக பயன்படுத்தி உருவாக்கி வைத்திருந்த அந்த பயம், மக்களவை தேர்தல் முடிவு வெளியான அடுத்த நிமிடமே மறைந்து போனது. 56 இன்ச் மார்பு, கடவுளுடன் நேரடியாக பேசுபவர் என்கிற பேச்சுக்கள் எல்லாம் இப்போது காணாமல் போய் விட்டன என அமெரிக்காவில் பல்கலைக்கழக மாணவர்களிடையே ராகுல் பேச்சு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
வாஸ்கோடகாமா இந்தியாவுக்கு கடல் வழியைக் கண்டுபிடிக்கவில்லையாம்! மாறாக குஜராத்தைச் சேர்ந்த சந்தன் என்ற இந்திய கடல் வணிகரைப் பின்தொடர்ந்தார் என்று மத்தியப் பிரதேச உயர்கல்வி அமைச்சர் இந்தர் சிங் பர்மர் இந்தர் சிங் பேச்சு.
ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி, சமஸ்திபூரில் இருந்து ‘கார்யகர்த்தா சம்வத் யாத்திரை’ தொடங்கினார்.
உ.பி., இடைத்தேர்தலில் பாஜக அனைத்து இடங்களையும் இழக்கும், 2027இல் தோல்வியை சந்திக்கும்: அகிலேஷ் உறுதி.
தி டெலிகிராப்
நீதிபதிகளை நியமிப்பதற்கான கொலிஜியம் முறை, பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்தவர்கள் உயர் நீதித்துறைக்கு நியமிக்கப்படுவதை தடுக்கிறது என மாநிலங்களவை உறுப்பினர் உபேந்திர குஷ்வாஹா குற்றச்சாட்டு.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *