அரசாங்கம் நடத்த வரி வேண்டுமானால் அதை நேரிடையாகவே ஏழைகளிடமிருந்து வசூல் செய்து கொண்டால் என்ன? அதற்கு மறைமுகமாகத் திட்டம் போடுவது ஏன்? அதற்காக முதலாளி என்று ஒருவரை நியமித்து அவர்களை ஆனமட்டும் கொள்ளை அடிக்கும்படி அனுபவித்து விட்டு, அவர்கள் அடையும் இலாபத் தொகையில் ஒரு அணாவோ, இரண்டு அணாவோ பெற்று அரசாங்கம் நடப்பானேன்? உனக்கு வேண்டிய ஒரு அணாவுக்காக ஏஜெண்ட் அல்லது எஜமானுக்கு ஏழைமகன் பதினைந்து அணாவா அழ வேண்டும்? நீயே சகல நிர்வாகங்களையும் எடுத்துக் கொண்டு அந்நிர்வாகத்திற்கான செலவை மட்டும் இலாபமாக வைத்து மக்களுக்கான வசதிகளை அளித்து வருவதற்கு என்ன தடை இருக்க முடியும்?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (1429)
Leave a comment