கும்பகோணம் கழக மாவட்டம் , திருவலஞ்சுழி கிராமத்தில் உள்ள ஏழுமாந்திடல் என்னும் இடத்தில் நரிக்குறவர்கள் வாழும் பகுதி உள்ளது. இப்பகுதியில் உள்ள நரிக்குறவர் மக்களில் கல்வி அறிவு இன்னும் எட்டப்படாத நிலையில் முதன்முதலாக சந்தியா என்ற பெண் இளங்கலை தமிழ் படித்து பின் இளங்கலை கல்வியியல் முடித்திருக்கிறார். செய்தியறிந்து அவரது இல்லத்தில் பகுத்தறிவாளர் கழக பொதுச்செயலாளர் வி.மோகனும், குடந்தை மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் க.திருஞானசம்பந்தமும் நேரடியாக சந்தித்து பாராட்டு தெரிவித்து சிறப்பு செய்து தந்தை பெரியார் பற்றிய நூல்களை அளித்தார்கள்.