கடவுளை நம்புபவர் கைவிடப்படுவர்: கேதார்நாத்தில் பக்தர்கள் அய்ந்து பேர் பலி

1 Min Read

கேதார்நாத், செப்.11- உத்தரகாண்ட் மாநிலம் ருத்தரபிரயாக் மாவட்டத்தில் உள்ள கேதார்நாத் கோவிலுக்கு பக்தர்கள் செல்கிறார்கள். 9.9.2024 அன்று சோன்பிரயாக்-கவுரிகுண்ட் இடையே சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ள மான்குடியா பகுதியில். கேதார்நாத்கோவிலுக்கு சென்ற பக்தர்கள் சிலர் நடைபயணமாக திரும்பிக்கொண்டு இருந்தனர். அப்போது அந்த பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக, அந்த நெடுஞ்சாலையில் திடீரென்று நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் சிக்கினர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக்குழுவினர். அங்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் உள்ளூர் காவல்துறையினர் உதவியுடன் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்துக்குப் பின்னர். மத்தியபிரதேச மாநிலம் தார் பகுதியைச் சேர்ந்த கோபால் (வயது 50) என்ற என்ற பக்தரின் உடல் மீட்கப்பட்டது.
மீட்புப் பணியில் தோய்வு ஏற்பட்டு, பின்னர் நேற்று (10.9.2024) அதிகாலை 5 மணிக்கு தொடங்கிய மீட்பு பணிகள், காலை 7.30 மணிக்கு நிறைவு பெற்றது. இதில் மேலும் 4 பக்தர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. இதில் 3 பேர் பெண்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *