கேதார்நாத், செப்.11- உத்தரகாண்ட் மாநிலம் ருத்தரபிரயாக் மாவட்டத்தில் உள்ள கேதார்நாத் கோவிலுக்கு பக்தர்கள் செல்கிறார்கள். 9.9.2024 அன்று சோன்பிரயாக்-கவுரிகுண்ட் இடையே சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ள மான்குடியா பகுதியில். கேதார்நாத்கோவிலுக்கு சென்ற பக்தர்கள் சிலர் நடைபயணமாக திரும்பிக்கொண்டு இருந்தனர். அப்போது அந்த பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக, அந்த நெடுஞ்சாலையில் திடீரென்று நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் சிக்கினர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக்குழுவினர். அங்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் உள்ளூர் காவல்துறையினர் உதவியுடன் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்துக்குப் பின்னர். மத்தியபிரதேச மாநிலம் தார் பகுதியைச் சேர்ந்த கோபால் (வயது 50) என்ற என்ற பக்தரின் உடல் மீட்கப்பட்டது.
மீட்புப் பணியில் தோய்வு ஏற்பட்டு, பின்னர் நேற்று (10.9.2024) அதிகாலை 5 மணிக்கு தொடங்கிய மீட்பு பணிகள், காலை 7.30 மணிக்கு நிறைவு பெற்றது. இதில் மேலும் 4 பக்தர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. இதில் 3 பேர் பெண்கள்.
கடவுளை நம்புபவர் கைவிடப்படுவர்: கேதார்நாத்தில் பக்தர்கள் அய்ந்து பேர் பலி
Leave a comment